fbpx

அண்ணிக்கு பீட்சா ஊட்டிவிட்ட கணவன்..!! ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற மனைவி..!! கடைசியில் நடந்த பயங்கர ட்விஸ்ட்..!!

தனது கணவன் அவரது அண்ணிக்கு பீட்சா ஊட்டியதால், ஆத்திரமடைந்த மனைவி தனது 4 சகோதரர்களை வீட்டிற்கு வரவழைத்து கொடூரமான செயலில் ஈடுபட்டுள்ளார்.

கிழக்கு டெல்லியின் சீலம்பூர் பகுதியில் அக்டோபர் 17ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் ஒரு வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், இது பீட்சாவிற்கான சண்டை என்பது தெரியவந்தது. கணவன் அண்ணிக்கு பீட்சா ஊட்டியபோது மனைவிக்கு கோபம் வந்துள்ளது.

அவள் தனது நான்கு சகோதரர்களையும் ஒரே இரவில் வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் மைத்துனருக்கு துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், காயமடைந்த பெண்ணை குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பெண்ணின் வயிற்றில் தோட்டா பாய்ந்தது. அதை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்

தகவலின்படி, லோஹா மார்க்கெட்டில் வசிக்கும் ஜீஷானை சாடியா என்ற பெண் திருமணம் செய்து கொண்டார். சாடியாவுக்கு ஒரு மைத்துனர் மற்றும் ஒரு அண்ணியும் உள்ளனர். இரு குடும்பமும் ஒத்துப்போவதில்லை. குடும்பத்தினரிடையே ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை, ஜீஷன் வீட்டிற்கு பீட்சா வாங்கினார். ஆனால், அவர் தனது இளைய சகோதரர் ஜாவேத்தின் மனைவி மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு பீட்சாவை வழங்கினார். சாடியா இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அண்ணிக்கு கணவர் பீட்சா ஊட்டுவது சாடியாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் கோபமடைந்த அந்த பெண் தனது சகோதரர்களை அழைத்து இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். இந்த வழக்கில் 4 சகோதரர்களையும் காவல்துறையினர் கைது செய்து வேறு ஏதேனும் பிரச்சனையா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Read More : இது தெரிந்தால் இனி நீங்களே கோழி கால்களை கேட்டு வாங்கிட்டு வருவீங்க..!! சருமம் முதல் இதய ஆரோக்கியம் வரை..!!

English Summary

After her husband fed her sister-in-law pizza, the enraged wife called her 4 brothers home and committed the heinous act.

Chella

Next Post

சென்னையில் மீண்டும் கனமழை... பள்ளி, கல்லூரிகள் விடுமுறையா...? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...!

Fri Oct 18 , 2024
Heavy rain again in Chennai... School, colleges holiday...? Notification of District Collector

You May Like