காலம் மாறினாலும் கலாச்சாரம் மாறாமல் , இயற்கையோடு இயற்கையாக, பாரம்பரிய முறைப்படி இன்றளவும் சில பழங்குடியின மக்கள் பாரம்பரியத்தை கடைபிடித்துவருகின்றனர். அப்படி ஒரு விநோத வழிமுறையை நமீபியாவை சேர்ந்த பழங்குடியின மக்கள் பின்பற்றிவருகின்றனர். அதாவது, நமீபியாவைச் சேர்ந்தவர்கள் ஹிம்பா பழங்குடியினர். இங்கு 50,OOO பேர் உள்ளனர்.
இவர்கள் தங்களுக்கென தனியான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கொண்டுள்ளனர். பழங்குடி மக்களைப் போலவே, உணவைத் தேடி தங்கள் நாள் முழுவதும் செலவிடுகிறார்கள். இந்த பழங்குடியினரில் குளிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் தண்ணீரில் குளிப்பதற்குப் பதிலாக, புகை போட்டுக் குளிப்பார்கள். வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவிகளை அவர்களது கணவன்கள் விருந்தளிக்கின்றனர்.

இதற்காக அவர்கள் வீட்டில் தனி அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உறவில் உள்ள பொறாமை உணர்வு நீங்கும் என நம்புவதாகக் கூறுகின்றனர். கற்காலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்களோ, அதே வழியில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் பழக்கவழக்கங்களைப் பார்த்து பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த பழங்குடியினர் தங்கள் மரபுகளை பாதுகாத்து வருவதாக நம்புகின்றனர்.