fbpx

நான் ஒரு தாய்!. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ராய்!

Aishwarya Rai: தனது மகள் பிறந்த பிறகு உடல் எடை கூடியதால் உருவக்கேலியை எதிர்கொண்டதாக நடிகை ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிகை ஐஸ்வர்யா ராயைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2011ம் ஆண்டு ஆராத்யா என்ற மகள் பிறந்தார். இவருக்கு 14 ஆகும் நிலையில், ஐஸ்வர்யா ராய் – கணவர் இடையே கடந்த சில மாதங்களாகக் கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும், அவர்கள் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித தகவல்களும் கூறப்படவில்லை. இந்தநிலையில், தனது உருவக்கேலி குறித்து கசப்பான அனுபவத்தை ஐஸ்வர்யா ராய் பகிர்ந்துள்ளார்.

2011 ஆம் ஆண்டில் தனது மகள் ஆராத்யா பிறந்த பிறகு, நடிகை ஐஸ்வர்யா ராய் எடை அதிகரிப்பதற்காக விமர்சனத்திற்கு ஆளானார். இதுகுறித்து 2015ம் ஆண்டு நேர்க்காணலில் பேசிய ஐஸ்வர்யா ராய், தனது கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரித்தது இயற்கையானது. தான் எப்போதும் உடல் எடை மெலிந்து இருப்பதற்கு முக்கியதும் கொடுப்பதில்லை என்றார்.தனது தோற்றத்தை பார்த்து சிலர் உருவ கேலி செய்ததாகவும், தாயான பிறகு உடலில் மாற்றங்கள் வருவது இயற்கைதான் எனவும் தெரிவித்தார்.

பல நடிகைகள் தங்கள் உருவத்தை மீட்டெடுக்க “விரைவான திருத்தங்களை” தேர்வு செய்கிறார்கள் என்று கூறிய ஐஸ்வர்யா, இதுதான் நிஜம்; இதுதான் நான். நான் ஒரு தாய், இது நடக்கும், இது எனக்கும் நடந்தது, அதுவும் பரவாயில்லை. ‘ சைஸ் ஜீரோ ‘ போக்கை நான் எப்போதும் ஆதரித்ததில்லை என்று கூறியுள்ளார். ஐஸ்வர்யாவின் இந்த பேச்சு, பல பெண்களுக்கு கர்ப்பத்திற்குப் பிறகு தங்கள் சொந்த உடலை பாராட்டுவதற்கான நம்பிக்கையை அளிக்கும் வகையில் உள்ளது.

Readmore: 2024 ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா!. அமெரிக்காவைச் சேர்ந்த துருவி படேல் முடிசூடினார்!

English Summary

I am a mother!. Aishwarya Rai shared her bitter experience!

Kokila

Next Post

ஷாக்!. இன்சுலின் பென் கேட்ரிட்ஜ் பற்றாக்குறை!. சர்க்கரை நோயாளிகள் கடும் அவதி!

Fri Sep 20 , 2024
Patients hit by Insulin Pen cartridge shortage in Kerala

You May Like