fbpx

”என்னை கொலைகாரனா ஆக்கிட்டியே லட்சு”..!! காட்டுப்பகுதியில் முன்னாள் காதலிக்கு நேர்ந்த சோகம்..!! பரபரப்பு..!!

தனது முன்னாள் காதலி மீது கல்லை போட்டு கொலை செய்து முகநூலில் நேரலையில் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனுா் தாலுகா மலை மாதேஸ்வரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப் பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாகமரைச் பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ். இவர், பென்னாகரம் பகுதியைச் சோந்த 35 வயதான லட்சுமி என்ற தனது முன்னாள் காதலியை கல்லை போட்டு கொலை செய்துள்ளார். கொலை செய்ததை பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தார். அதில், “என்னை கொலைகாரனாக ஆக்கிட்டியே லட்சுமி, போயிட்டியா, அந்த ஈஸ்வரன் என்னை கொலை செய்ய அனுப்பி வைத்துவிட்டான். நீ இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கொலை செய்ய வச்சுட்டான்” என்றார். மேலும், “பாருங்க இந்த கல்லைத் தூக்கி போட்டு தான் கொலை செய்தேன். நான் தான் கொலை செய்தேன்” என்று ஆவேசமாக கத்தி நேரலை செய்துள்ளார்.

பின்னர், அங்கிருந்த மரம் ஒன்றில் முனிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தகவல் அறிந்த மலை மாதேஸ்வரா காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். லட்சுமியின் கணவா் ரமேஷ் வெளியூா் சென்றிந்த நிலையில், இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

பெரும் இழப்பு..!! முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் கணவர் மரணம்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

Fri Feb 24 , 2023
இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ஷெகாவத் காலமானார். அவருக்கு வயது 89. இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவும் ஆவார். இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக உடல்நல பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. முன்னதாகவே இவர் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில், புனேவில் உள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த தேவ்சிங் ஷெகாவத், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். […]
பெரும் இழப்பு..!! முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் கணவர் மரணம்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

You May Like