fbpx

’நான் ஏற்கனவே பொதுச்செயலாளர்தான்..! தலைவர் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக்கூடாது..! – சசிகலா

தான் ஏற்கனவே பொதுச்செயலாளர் ஆகிவிட்டதாகவும் எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு சண்டை போட்டுக் கொள்வதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை அன்பகம் காப்பகத்தில் இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மாணவி லட்சுமி பிளஸ்2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்றதை அறிந்த சசிகலா, காப்பகத்திற்கு வருகை தந்து மாணவியைப் பாராட்டினார். பின்னர், மாணவி லட்சுமி தனது கால்களால் வரைந்த ஓவியங்களைப் பார்த்து வியப்படைந்தார். தொடர்ந்து காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கிய அவர், மாணவி லட்சுமிக்கு 5 ஆயிரமும், காப்பக நிர்வாகி ஞானசம்பந்தத்திடம் ஒரு லட்சமும் வழங்கினார்.

Gen Secy' Sasikala Writes To AIADMK Cadres; Instructs 'Unite & Stop  Poisoning The Party'

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக தலைமைக் கழகம் தற்போது சீல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவிக்கு நீங்களும் உரிமை கோருவீர்களா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்து உள்ளதாகத் தெரிவித்தார். தான் ஏற்கனவே பொதுச்செயலாளர் ஆகிவிட்டதாகவும் எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு சண்டை போட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

Preferential treatment: VK Sasikala got cell, bed, cook in prison, confirms  probe- The New Indian Express

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை செய்து தரவில்லை என பொதுமக்கள்
குற்றம்சாட்டுகின்றனர். முதியோர் உதவித்தொகை மற்றும் மின்வெட்டு ஆகிய பிரதான பிரச்சனைகளை பொதுமக்கள் குற்றச்சாட்டாக தன்னிடம் முன்வைக்கின்றனர். தான் தலைமைக் கழகத்திற்கு கட்டாயம் செல்வேன். தான் வெளியில் செல்வதால்தான் மக்கள் தன்னிடம் குறைகளை கூறுகின்றனர். கட்சி என்று சொல்லக் கூடியவர்கள் உட்கட்சியிலேயே சண்டையிட்டு கொண்டால் பொதுமக்கள் நாளை எப்படி ஓட்டு போடுவார்கள்? என கேள்வி எழுப்பினார். இதனை அவர்கள் நினைக்கவில்லை.

Truth has come out, says Sasikala in reaction to OPS's remark before panel  | Business Standard News

தற்போது உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தல்களில் திமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர். தெருக்கடை வியாபாரிகளிடம் அவர்கள் அராஜகப் போக்கை கையாள்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதிமுகவினர் முதலில் ஒழுங்காக இருக்க வேண்டும். தலைவர் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக் கூடாது. கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் அதனை சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

Chella

Next Post

தாய்லாந்தில் நிறைவேறியது மசோதா... பாலியல் குற்றம் செய்தால் ஆண்மை பறிக்கப்படும்...!

Wed Jul 13 , 2022
குறுகிய சில காலத்திற்குப் பிறகு மீண்டும் குற்றம் இழைக்கும், பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன ஊசி மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதிக்கும் மசோதாவை தாய்லாந்து செனட் நிறைவேற்றியுள்ளது. மேலும் இந்த மசோதா 145 செனட்டர்களின் ஆதரவை பெற்றுள்ளது. 2013ஆம் வருடத்திற்கும் மற்றும் 2020 ஆம் வருடத்திற்கும் இடையில் தாய்லாந்து நாட்டின் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 16 ஆயிரம் பாலியல் குற்றவாளிகளில் மீண்டும் 4848 பேர் பாலியல் குற்றங்களை செய்துள்ளனர்.என்று […]

You May Like