fbpx

’எனக்கு 16 வயசுதான் ஆகுது’..!! பள்ளி மாணவியை விடாமல் துரத்திய சிறுவன்..!! இறுதியில் நேர்ந்த சோகம்..!!

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பீச்சகானஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் (17). இவர், தனது தாய் லட்சுமம்மாவுடன் வசித்து வந்தார். இவரது தந்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மனோகர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவர் அதேபகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மனோகரின் காதலை பள்ளி மாணவி ஏற்கவில்லை. நீண்டகாலமாக மாணவியின் பின்னால் சென்று காதலை கூறியும் அவர் மறுத்துவிட்டார். இதற்கிடையே, கல்லூரிக்கு செல்லாமல் இருந்து வந்த மனோகர், லாரி கிளீனராக வேலைக்கு சேர்ந்தார்.

பள்ளி மாணவி காதலை ஏற்க மறுத்துவிட்ட நிலையில், ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவியை மனோகர் கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தான் 10ஆவது படிப்பதாகவும், தனக்கு 16 வயதே ஆவதாகவும், அதனால் தற்போது திருமணம் செய்து கொள்ள இயலாது என்று மாணவி திட்டவட்டமாக கூறியுள்ளார். மீண்டும் தன்னை பின்தொடர்ந்தால் பெற்றோரிடம் கூறிவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளர். இதனால் மன உளைச்சலில் இருந்த மனோகர் தான் வேலை பார்த்த லாரியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Chella

Next Post

Degree முடித்த நபர்களுக்கு TVS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

Wed Apr 12 , 2023
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Senior Digital Product Owner – Finance பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 5 முதல் 10 வருடம் […]

You May Like