fbpx

‘உன்னை நம்பி தானே வந்தேன்’..!! ’விட்டுடு டா’..!! 15 வயது சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி. இவருக்கு 15 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில், கோவில் திருவிழாவின் போது சூர்யா (19) என்பவர் அந்த சிறுமிக்கு அறிமுகமாகியுள்ளார். பின்னர் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்கள் மூலம் பேசி வந்துள்ளனர். இது நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில், கடைக்கு சென்றுவிட்டு வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு இரவு 8 மணியளவில் காதலன் சூர்யாவை சந்திக்க வந்துள்ளார் சிறுமி. அப்போது சூர்யா நைசாக பேசி காட்டு பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். இதற்கிடையே, கடைக்கு சென்ற மகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து காலையில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அவரிடம் பெற்றோர் விசாரிக்கையில், காதலன் சூர்யா வலுக்காட்டாயமாக மது குடிக்க வைத்து பலாத்காரம் செய்தததாகவும், அத்துடன் தனது நண்பர்களையும் வரவழைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், காரைக்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சூர்யா, நிஷாந்த் உள்ளிட்ட 5 பேர் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

இதற்கிடையே, சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து ஆத்திரமடைந்த சிலர், சூர்யா, நிஷாந்தை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த தகவல் அறிந்ததும் மருத்துவமனைக்கு சென்ற போலீசார் சூர்யா, நிஷாந்த் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த வினோத்குமார் (20), வேலு (20) உள்பட மேலும் 3 பேரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Chella

Next Post

’அப்பா-அம்மா சொன்னா கேட்க மாட்டியா’..? வேறு சாதி இளைஞரை காதலித்த அக்காவை வெட்டிக்கொன்ற தம்பி..!!

Thu Dec 7 , 2023
நெல்லை மாவட்டம் இராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசீர். இவர், கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கு தங்கத்தாய் (20) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். தங்கத்தாய் கங்கைகொண்டான் சிப்காட்டில் பணியாற்றி வந்தார். அப்போது இவருக்கு மாற்று சமூகத்தை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்ததை அடுத்து இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இதை பெரிதாக […]

You May Like