காதல் தோல்வியால் கண்ணீர் விட்டு கதறும் சிறுவனின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்றளவில் உள்ள குழந்தைகள் திரைப்பட மோகம், செல்போன் ஆதிக்கம் உள்ளிட்ட காரணங்களால் பல விஷயங்களை அவர்களின் தகுந்த வயதுக்கு முன்னதாகவே அறிந்துகொள்கின்றனர். நாம் அமைதியாக இருந்தாலும் நம்முடன் இருக்கும் நண்பர்கள் நம்மை உசுப்பேற்றியே மனதை கெடுத்துவிடுவார்கள் என்பதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் நமது வாழ்க்கையில் நடந்திருக்கும். இந்நிலையில், சிறுவன் ஒருவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதில், “கால்களில் விழுந்து கும்பிட்டேனே. அப்போது தெரியாதா உனக்கு காதல்? இப்போதுதான் தெரியுமா? அவளாக வந்து காதலிக்கிறாளா என பார்ப்பேன். இனி இந்த ஜென்மத்திற்கு அவளை மறக்க முடியாது. குட் பாய்” என்று கூறியிருக்கிறான் அந்த சிறுவன். இந்த வீடியோவுக்கு பலரும் தங்களது கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.