fbpx

’நான் எந்த வேலையும் செய்யல’..!! எனக்கு சம்பளம் ரூ.3.10 கோடி..!! வைரலாகும் ஊழியரின் பதிவு..!!

அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியில் இருப்பதாகவும், எந்தவித வேலையும் செய்யாமல் இருப்பதாகவும், ஆனால் அவர் ஆண்டுக்கு ரூ.3.10 கோடி சம்பளம் பெறுவதாகவும் வைரலாகும் பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது. இதைப்பார்த்த சிலர், எவ்வளவு வேலை செய்தாலும், அதற்கான ஊதியம் கிடைக்கவில்லை என புலம்பி வருகின்றனர்.

ஆனால், இங்கு ஒருவர் எந்த வேலையும் செய்யாமல் சும்மாவே இருந்ததற்காக ஆண்டுக்கு ரூ.3 கோடி சம்பளம் பெற்றுள்ளார். அது வேறு எங்கும் இல்லை அமேசான் நிறுவனத்தில்தான். அமேசான் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மூத்த ஊழியர் ஒருவர் வெளியிட்ட பதிவு தான், இணையத்தில் வைரலாகி வருகிறது. கூகுள் நிறுவனம் ஆட்குறைப்பை மேற்கொண்டபோது என்னுடைய வேலை பறிபோனது. இதையடுத்து, அமேசான் நிறுவனத்தில் சேர்ந்தேன். கடந்த 1.5 ஆண்டுகளாக, முதுநிலை தொழில்நுட்ப திட்ட மேலாளராக பணியாற்றி வருகிறேன். என்னுடைய ஊதியம் ஆண்டுக்கு ரூ.3.10 கோடி. இந்த ஊதியத்துக்கான எந்த வேலையும் நான் செய்வதில்லை.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மிகக் குறைவான வேலைகளையே நான் செய்திருக்கிறேன். வெறும் 3 நாட்களில் முடிக்க வேண்டிய வேலையை 3 மாதங்கள் எடுத்துள்ளேன். என்னுடைய வேலை நேரத்தில் பெரும் பகுதி அலுவலக மீட்டிங்களுக்கே கழிந்து விடுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வேலை செய்யாமல் சும்மா இருப்பதற்காக சம்பளம் வாங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : ’என் கணவருக்கு எதையோ கலந்து குடுத்துவிட்டார்கள்’..!! பிஜிலி மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

English Summary

A viral post of an Amazon employee who has been working for the past one and a half years and is not doing any work, but is getting a salary of Rs 3.10 crore per year has created a sensation.

Chella

Next Post

CM Stalin | அமெரிக்கா பயணம்.. கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில் தான்..!! - முதலமைச்சர்

Tue Aug 27 , 2024
In order to attract business investments to Tamil Nadu, Chief Minister MK Stalin is leaving Chennai for America today at 10 pm by Emirates flight to meet the investors.

You May Like