fbpx

”ஜெயலலிதாவுக்கு ரூ.2 கோடி கடனாக கொடுத்தேன்”..!! இதுதான் வரலாறு..!! ஓபிஎஸ் பரபரப்பு தகவல்..!!

சென்னையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்திய அதே நேரத்தில், கோவையில் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இந்தக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “சாதாரண தொண்டனாக இருந்த ஓபிஎஸ், நகர்மன்ற தலைவராக வந்திருக்க முடியுமா? எம்.எல்.ஏ ஆகியிருக்க முடியுமா? அமைச்சராகி இருக்க முடியுமா? முதலமைச்சராகி இருக்க முடியுமா? அதிமுகவின் இத்தனை ஆண்டு கால சரித்திரத்தில் 12 ஆண்டு காலம் கழகத்தின் பொருளாளராக இருந்தவன் நான் தான்.

ஜெயலலிதா என்னிடம் அந்த பொறுப்பை கொடுத்தபோது 2 கோடி ரூபாய் பற்றாக்குறை இருந்தது. இரண்டே வருடத்தில் கட்சியின் நிதி 4 கோடி ஆனது. ஒருநாள் ஜெயலலிதா என்னை அழைத்து, எனக்கு தனிப்பட்ட முறையில் நிதி சுமை அதிகமாகிவிட்டது. ஏராளமான வழக்குகள் என் மீது இருப்பதால், வழக்கறிஞர்களுக்கு பணம் தர வேண்டும் என்று கட்சி நிதியில் இருந்து 2 கோடி ரூபாய் தாருங்கள் என்று கேட்டார்.

உண்மையில் கண்ணீர் விட வேண்டிய நிகழ்வு அது. உடனே நான் 2 கோடி ரூபாயை வழங்கினேன். அந்த பணத்தை ஒரே மாதத்தில் திருப்பிக் கொடுத்துவிட்டார் ஜெயலலிதா. இதுதான் வரலாறு. இன்றைக்கு எங்களை எல்லாம் வம்படியாக வெளியேற்றி விட்டு அவர்கள் பொதுக்குழுவை கூட்டி இருக்கிறார்கள்” என பேசியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

Chella

Next Post

குரூப் 2 காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு..!! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

Tue Dec 26 , 2023
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடந்த குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். சுமார் 9 லட்சம் பேர் தேர்வை எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் […]

You May Like