fbpx

”உன் அழகுக்காக மட்டும்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்”..!! துடிதுடித்து உயிரிழந்ததை ரசித்த கொடூரம்..!!

ஒடிசா மாநிலம் நபரங்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிஸ்வநாத். இவரது மனைவி காயத்ரி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார். இவருக்கு 3 வயதில் மகன் இருந்திருக்கிறான். இந்நிலையில் தான் காயத்திரியின் அழகில் மயங்கிய பிஸ்வநாத் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். திருமணத்திற்கு முன்பு வரைக்கும் காயத்ரி மகனை தன் மகன் போலவே தந்தையுடன் பாசத்துடன் வளர்ப்பதாக உறுதி அளித்திருக்கிறார். ஆனால், திருமணத்திற்கு பிறகு அந்த சிறுவன் இருப்பதையே இடையூறாக நினைத்துள்ளார்.

இதையறிந்த காயத்ரி காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் காயத்ரியின் 3 வயது மகனுக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இருமலும் தொடர்ந்து இருந்திருக்கிறது. அப்போது பிஸ்வநாத் இடம் இருமல் மருந்து வாங்கி வருமாறு கூறியிருக்கிறார் காயத்ரி. இருமல் மருந்து வாங்கி வந்த பிஸ்வநாத் குழந்தையை மடியில் போட்டு மருந்து கொடுத்திருக்கிறார். அப்போதும் குழந்தைக்கு சிறுவனுக்கு வாந்தி எடுத்து இருக்கிறது. மீண்டும் மீண்டும் இருமல் மருந்து கொடுத்திருக்கிறார். காலை 11 மணிக்கு இருமல் மருந்து கொடுத்த நிலையில் மாலை 3 மணி அளவில் குழந்தை பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தது.

அந்த 4 மணி நேரமும் குழந்தையை தாயிடம் கொடுக்காமல் தனது மடியிலேயே வைத்திருந்து அந்த குழந்தை மெல்ல மெல்ல துடிதுடித்து உயிரிழந்ததை ரசித்திருக்கிறான் அந்த கொடூரன். நீண்ட நேரமாக குழந்தையை மடியிலேயே வைத்திருந்ததால், காயத்திரிக்கு சந்தேகம் வந்திருக்கிறது. அதற்கேற்றார் போல் குழந்தையும் இறந்து விட்டதால், என்ன செய்தாய் என்று கேட்க சரியான பதில் சொல்லாமல் இருந்திருக்கிறார். இதையடுத்து, காயத்ரி, போலீசாருக்கு தகவல் கொடுத்து இருக்கிறார். இது தெரிந்ததும் பிவிஸ்வநாத் தலைமறைவாகி உள்ளார். இதையடுத்து, அவரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து பிவிஸ்வநாத் போலீசாரிடம் கூறுகையில், “காயத்ரியின் அழகுக்காக மட்டுமே அவளை திருமணம் செய்து கொண்டேன். ஆனால், எங்களின் இல்லற வாழ்க்கைக்கு அவளின் குழந்தை இடையூறாக இருந்தது. அதனால்தான் இருமல் மருந்தில் விஷம் கலந்து துடிதுடித்து உயிரிழந்ததை மடியில் போட்டு ரசித்தேன்” என்று சொல்லி இருக்கிறான் அந்த கொடூரன்.

Chella

Next Post

பான் கார்டு - ஆதார் எண் இணைப்பு..!! கால அவகாசம் மேலும் நீட்டிப்பு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Tue Mar 28 , 2023
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது. குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று தீர்ப்பு வழங்கியது. இதன் பிறகு பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் […]

You May Like