fbpx

’கணவரை விவாகரத்து செய்து மகனையும் தத்துக் கொடுத்து விட்டேன்’..!! நடிகை கிருத்திகா பகீர் பேட்டி..!!

பிரபல சின்னத்திரை நடிகை கிருத்திகா, தனக்கு விவாகரத்தான விஷயத்தையும் தன் மகனைத் தத்துக் கொடுத்து விட்டதையும் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டவர் இல்லம்’ சீரியலில் நடித்து வருபவர் கிருத்திகா. இதற்கு முன்பு அவர் பல சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மகனுடன் கலந்து கொண்ட இவர், தனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்பதை வெளிப்படையாக கூறினார். நடனத்தில் ஆர்வம் கொண்ட கிருத்திகா, கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவருக்குத் திருமணம் நடந்தது. வீட்டின் வற்புறுத்தலின் பேரில் அருண் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், விவாகரத்து குறித்து பேட்டியில் பேசி இருக்கும் கிருத்திகா, “திருமணம் ஆனதில் இருந்தே பல விஷயங்கள் எங்களுக்குள் ஒத்துப் போகாமல் இருந்தது. இதனால், பிரச்சனைகளும் வந்தது. பின்பு, வீட்டில் எல்லோரும் பேசி முடிவெடுத்த பின்பே விவாகரத்து வாங்கினோம். ஆனால், அப்போது என் மகனிடம் யாராவது தந்தை குறித்துக் கேட்டால் கஷ்டப்படுவானோ என கவலைப்பட்டேன். ஆனால், அவனுக்கு அப்பாவாக இருந்து என் அண்ணன் அவனை வளர்த்து வருகிறார். என் அண்ணனுக்கு என் மகனைத் தத்துக் கொடுத்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார். மேலும், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தனக்கு ஆசை இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Chella

Next Post

Missing CM.? வைரலான அண்ணாமலையின் ஹேஸ் டேக்.! ட்ரெண்டிங் செய்யும் பிஜேபி.!

Tue Dec 19 , 2023
தமிழகம் முழுவதும் புயல் மற்றும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வட மாநிலங்களை தாக்கிய புயல் மற்றும் கனமழை தற்போது தென் மாவட்டங்களை தாக்கி இருக்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி போயிருக்கிறது இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலின் குறித்து கூறியிருக்கும் கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும் […]

You May Like