2010ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான லீடர் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் ரிச்சா கங்கோபத்யாய். பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன படத்திலும், சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்திலும் நடித்து பிரபலமானார். சினிமாவில் அறிமுகம் ஆகிய ஒரு சில ஆண்டுகளில் நான் இனிமேல் நடிக்கப் போவதில்லை என்றும், பிடித்த வேலையை செய்யப் போவதாக கூறி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
சினிமாவில் இருந்து விலகிய காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்துள்ள அவர், சினிமாவில் நடிகையாக வேண்டும் என்று ஆசை இருந்ததாகவும், தற்போது சிறந்த தொழிலதிபராக வேண்டும் என்று ஆசை தோன்றியிருக்கிறது. வாஷிங்டன் யுனிவர்சிட்டி எம் பி ஏ படித்து முடித்து இருக்கிறேன். தொழிலில் சாதிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. சினிமாவில் நடித்த உடனே சம்பாதித்து விடலாம். ஆனால், எனக்கு போதுமான பணம் இருப்பதால் பணத்திற்காக சினிமாவில் ஓடுவது எனக்கு விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய கேள்விக்கு.. என்னை பட வாய்ப்பு தருவதாக படுக்கைக்கு அழைக்கவில்லை என்றும், கவர்ச்சியான காட்சியில் நடிக்க வேண்டும் என்றே கேட்டார்கள். பட வாய்ப்பு மற்றும் ரசிகர்களுக்காகத்தான் கவர்ச்சியாக நடிப்பதாகவும் ரிச்சா கூறி இருக்கிறார். கவர்ச்சியாக ஆடை அணிந்து வர சொல்வார்கள். இந்த காட்சிக்கு இது தேவையா என்று நான் கேட்க வேறு ஆடை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதனால் தான் சில சங்கடங்களை எதிர்கொண்டதாகவும், படுக்கைக்கு யாரும் இதுவரை அழைத்ததில்லை என்றும், யாரிடமும் நெருக்கமாக பழக மாட்டேன் என்றும் தெரிவித்தார்.