fbpx

“ என்னால் இன்னும் அதிலிருந்து வெளியே வரமுடியல…” நடிகை சமந்தா உருக்கம்..

நடிகை சமந்தா, நாக சைதன்யாவை பிரிந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும், இதில் இருந்து தான் இன்னும் வெளியே வர வில்லை என்று சமந்தா கூறியுள்ளார்.. சமீபத்தில் பிரபல யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் “ இந்த கடினமான காலங்களில், நான் மிகவும் இருண்ட இடத்தில் இருந்தேன், எனக்கு சில இருண்ட எண்ணங்கள் இருந்தன. இந்த எண்ணங்கள் என்னை அழிக்க விடப் போவதில்லை. அதனால் நான் ஒருபடி மேலே சென்று யோசிக்க வேண்டும்.. பல நெருங்கிய நண்பர்கள் என்னுடன் நின்றனர். நான் இன்னும் அந்த மோசமான நாட்களை கடக்கவில்லை.. ஆனால் மோசமான நாட்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது” என்று தெரிவித்தார்.

ரொம்பவே கஷ்டம்..!! நடிப்பில் இருந்து ஓய்வு..? சமந்தாவின் திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

தொடர்ந்து பேசிய சமந்தா “எனக்கு வேறு வழியில் எதிர்வினையாற்ற தெரியவில்லை. நான் எப்படி எதிர்வினையாற்ற விரும்புகிறேனோ, அதைத்தான் நான் செய்கிறேன். கடினமான தருணங்கள் கடந்து செல்கின்றன என்பதை அறிவது முக்கியம், அவற்றில் நாம் சிக்கிக் கொள்ளக்கூடாது” என்று தெரிவித்தார்..

நட்சத்திர ஜோடியான சமந்தா – நாக சைதன்யா இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.. பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு, இருவரும் தங்கள் பிரிவை அறிவித்தனர்.. இதை தொடர்ந்து நாக சைதன்யாவிடம் சமந்தா ஜீவனாம்சமாக ரூ.200 கோடி கேட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இருப்பினும், இந்த தகவலை சமந்தா மறுத்துவிட்டார். நாக சைதன்யா இப்போது சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இதனிடையே, தனது சாகுந்தலம் பட வெளியீட்டிற்கு சமந்தா தயாராகி வருகிறார். இப்படம் ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது. இது தவிர விஜய் தேவரகொண்டாவுடன் குஷியும், வருண் தவானுக்கு ஜோடியாக சிட்டாடல் ஆகிய படங்களில் சமந்தா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

தமிழகத்தில் அதிகரித்து வரும் நோய்த்தொற்று பரவல்…..! அனைத்து மருத்துவமனைகளிலும் இது கட்டாயம் சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு…..!

Sat Apr 1 , 2023
தமிழ்நாட்டில் தினசரி நோய் தொற்று பாதிப்பு மெல்ல, மெல்ல அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரே நாளில் 139 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 777 பேருக்கு நோய் தொற்று சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகளில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ மனைகளுக்கு வருகை […]

You May Like