fbpx

“ ஓ.சி-ன்னு விளையாட்டுக்கு சொன்னேன்..” சர்ச்சைக்குரிய கருத்து குறித்து அமைச்சர் விளக்கம்…

பெண்கள் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக பயணிப்பதை, ஓசி பயணம் என்று கூறியது குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த படி, நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் பயணம் என்று திட்டத்தை முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.. ஆனால் சில அரசு பேருந்து நடத்துநர்கள், பெண்களை தரக்குறைவாக நடத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.. எனினும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கு பெண் பயணிகளை முறையாக நடத்த வேண்டும் என்றும், அவர்களிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ அல்லது இழிவாகவோ அல்லது ஏளனமாகவோ பேசக்கூடாது என்று போக்குவரத்துத்துறை அறிவுறுத்தி இருந்தது..

இதனிடையே உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசிய வீடியோ ஒன்று வைரலானது.. அந்த வீடியோவில் பெண்கள் மத்தியில் பேசும் பொன்முடி, ‘இப்போ பஸ்ல எப்டி போறீங்க? இங்க இருந்து எங்க போக வேணும்னாலும் ஓசி. ஓசி பஸ்ல போறீங்க’ என்று கூறியிருந்தார்.. அமைச்சரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன..

எனினும் இதுகுறித்து அமைச்சர் பொன்முடி எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.. அதாவது ஓ.சி பேருந்து கட்டணம் பற்றி விளையாட்டாக கூறியதாகவும், அதை இவ்வளவு பெரிதுப்படுத்த தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.. பெண்கள் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக பயணிப்பதை, ஓசி பயணம் என்று அவர் பேசியது சர்ச்சையான நிலையில் இந்த விளக்கத்தை அமைச்சர் அளித்துள்ளார்.. எனினும் அரசியலமைப்பின் படி பொறுப்பேற்ற கொண்ட அமைச்சர் ஒருவர் பொதுவெளியில் பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது..

Maha

Next Post

’நைட் தூங்கும்போது என் புருஷன நெனச்சு’..!! என் மகனுக்கு ஃபோன் பண்ணி..!! ஆசிரியையின் அந்தரங்க பேச்சு

Fri Sep 30 , 2022
திருப்பூரில் 12ஆம் வகுப்பு மாணவியை மருமகளாக கூறி, தனது மகனிடம் பேச சொல்லி தொல்லை கொடுத்த ஆசிரியையை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த காரத்தொழுவு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கணிதப்பாட முதுநிலை ஆசிரியையாக சாந்தி பிரியா பணியாற்றி வருகிறார். இவர் மீது மாணவிகள் தொடர்ச்சியாக பல்வேறு அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 12ஆம் வகுப்பு மாணவி ஒருவரை மருமகளே என அழைக்கும் […]
’நைட் தூங்கும்போது என் புருஷன நெனச்சு’..!! என் மகனுக்கு ஃபோன் பண்ணி..!! ஆசிரியையின் அந்தரங்க பேச்சு

You May Like