தன் கணவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரை விட்டு விலக தயார் என ஜானி மாஸ்டரின் மனைவி சுமலதா பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
நடன இயக்குநர் ஜானி, தன்னைத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தி வந்ததாக 21 வயது இளம்பெண் புகார் அளித்திருந்த நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜானி மீதான பாலியல் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அவரை விட்டு விலகவும் தயாராக இருக்கிறேன் என்று அவரது மனைவி பேட்டியளித்துள்ளார். ஜானி மாஸ்டரின் மனைவி சுமலந்தா (எ) ஆயிஷா அளித்திருக்கும் பேட்டியில், “புகார் அளித்திருக்கும் அந்தப் பெண் சிறுமியாக இருந்த போது மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்தார். பின்பு, சினிமா வாழ்க்கையைப் பார்த்து சொகுசாக இருக்க இந்தத் துறைக்கு வந்து, என் கணவரிடம் வேலைக்கு சேர்ந்தார்.
ஹைதராபாத்தில் உள்ள திரைப்பட அசோசியேஷனில் உறுப்பினராக சேரக்கூட பணம் இல்லாமல் இருந்தவருக்கு உதவியது என் கணவர் தான். நடன இயக்குநர் அல்லது கதாநாயகியாக வேண்டும் என்பது தான் அந்தப் பெண்ணின் ஆசை. மும்பையில் பலாத்காரம் நடந்ததாக சொல்கிறாரே, அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது..? அப்படி என்றால் ஏன் அப்போதே சொல்லவில்லை..? அந்தப் பெண் சொன்னபடி பாலியல் தொல்லைக்குள்ளாகி இருந்தாலும் ஏன் இவரிடம் தொடர்ந்து வேலைப் பார்க்க வேண்டும்..? இவரிடம் பணிபுரிவது அதிர்ஷ்டம் என ஏன் சொல்ல வேண்டும்..? என் கணவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவரை விட்டு விலக நான் தயார்” என கூறியிருக்கிறார்.
Read More : பிக்பாஸ் 8இல் நகைச்சுவை ஜாம்பவான்..!! அடடே இந்த நடிகையுமா..? ஆரம்பத்துலயே பஞ்சாயத்து வெடிக்கப் போகுது..!!