fbpx

“Girl Friend” கூட்டிட்டு போய் சின்னத்தம்பி படம் பார்த்தேன் – விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ளது “வாரிசு” படம். முதலில் இந்த படத்திற்கு ஆந்திராவில் திரையங்குகள் கிடைப்பதில்லை என்ற சிக்கல் தோன்றி மறைந்தது, பிறகு தமிழகத்தில் அதே பிரச்சனை பூதாகரமாக வெடித்து தற்போது அதுவும் சரியாகி, 2023 ஆம் ஆண்டு பொங்கலன்று திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தே உள்ளது. இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நேரு உள் விளையாட்டு அரங்கில், ரசிகர்களுடன் ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது.

2 வருடங்களுக்குப் பின்னர் விஜய் திரைப்பட விழாவில் பங்கேற்றுக் கொள்ள இருக்கிறார் என்பதால், அவருடைய ரசிகர்கள் அவரை காண்பதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். அதோடு, விஜய் அரசியல் பேசுவாரா? என்னவிதமான குட்டி கதை சொல்லப் போகிறார்? என்றெல்லாம் எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் விருந்தையே கொடுத்தார் தளபதி விஜய்.

வாரிசு இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய விஜய் “நாம போற பயணம் நிறைவா இருக்கணும்ன்னு நாமபோற பாடகி சரியா இருக்கணும், வாய்ப்பு கிடைக்கிற அப்போ எல்லா நன்றாய் சொல்லிட்டே இருக்கணும், என்னை உருவாக்கிய கோழிகளுக்கு என்னுடைய நன்றி கலந்த முத்தங்களும்”, என்று கூறி ரஞ்சிதமே ஸ்டைலில் ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்தார். பிறகு வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுக்கு வாழ்த்து கூறினார், பிறகு “வாழ்த்துக்கள் பார் வாரிசு” நான் உங்களுக்கு பிறந்த வாரிசுக்கு சொன்னேன், “வாரிசு 2 எப்போ சார்” இப்போ நா படைத்த பத்தி கேட்டான் என்று கூறி, பிறகு வாரிசு படத்தின் இயக்குனர் வம்சிக்கு நன்றி சொன்னார்.

அதன்பிறகு சரத்குமார்.ஜெயசுதா, பிரபு, பிரகாஷ் ராஜ், ஷியாம், தெலுகு நடிகர் ஸ்ரீகாந்த், யோகிபாபு,குஷ்பூ போன்றோருக்கு நன்றி தெரிவித்தார். குறிப்பாக நடிகை குஷ்பூ-வை பற்றி பேசும்போது, அவங்க முகத்தை பார்த்தா நான் சின்னத்தம்பி டேஸ்-க்கு போய்டுவேன். நான் சின்னத்தம்பி படைத்த அடிச்சி புடிச்சி டிக்கெட் வாங்கி கமலா தியேட்டர்ல படம் பார்த்தது, நா என் பிரென்ட்ஸ் கூட போய் படம் பார்த்தது, நான் என் கேர்ள் பிரென்ட் கூட போய் படம் பார்த்தது என விஜய் பேசினார், அப்போது குறுக்கிட்ட நிகழ்ச்சி தொகுப்பாளினி ‘சார் அந்த கேர்ள் பிரென்ட் பெயரை கொஞ்சம் சொல்லுங்க’ என்றதுமே “நீ வேற போமா” என்று கூறி சிறிது நேரம் அமைதியாக பேச வந்த அனைத்தையும் மறந்து தலையில் கை வைத்து நின்றார் தளபதி, மேலும் நிகழ்சஹி தொகுப்பாளரம் அந்த கேர்ள் பிரென்ட் பெயரை கேட்க “இருப்பா ஷூ” என்று கூறி மேலும் தனது உரையை தொடர்ந்தார். இந்த நிகழ்வு தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Kathir

Next Post

அடித்தது ஜாக்பாட்..!! துபாய் லாட்டரியில் இந்திய டிரைவருக்கு ரூ.33 கோடி பரிசு..!!

Sun Dec 25 , 2022
துபாயில் நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் இந்தியாவைச் சேர்ந்த டிரைவருக்கு ரூ.33 கோடி பரிசு கிடைத்துள்ளது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜய் ஓகுலா. இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் துபாயில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாத சம்பளம் 3,200 திர்ஹாம்கள் (இந்திய மதிப்பில் ரூ.71,968). இந்நிலையில், துபாய் நகரில் லாட்டரிச் சீட்டு விற்பனை வெகு பிரபலம் என்பதால், அங்கு தங்கி வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அதிகளவில் […]
அடித்தது ஜாக்பாட்..!! துபாய் லாட்டரியில் இந்திய டிரைவருக்கு ரூ.33 கோடி பரிசு..!!

You May Like