fbpx

’சரக்கு அடிச்சிட்டு தான் அந்த காட்சியில நடிப்பேன்’..!! ’ஆல்கஹால் ரத்தத்திலேயே ஊறிப்போச்சு’..!! மனம் திறந்த மனிஷா கொய்ராலா..!!

90 மற்றும் 2000ம் காலகட்டங்களில் சூப்பர் ஹிட் நடிகையாக ஜொலித்தவர் தான் நடிகை மனிஷா கொய்ராலா. நேபாள-இந்திய நடிகையான இவர், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் மணிரத்தினத்தின் பம்பாய் படம் மூலம் அறிமுகமாகி மிகப்பெரிய நடிகையானார். இதை தொடர்ந்து இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்கள் நல்ல வெற்றியை பெற்று கொடுத்தனர்.

பின்னர் பாபா, ஆளவந்தான் உள்ளிட்ட படங்கள் மிதமான வரவேற்பையே பெற்றிருந்தது. சினிமாவின் உச்சத்தில் இருந்துக் கொண்டிருந்தபோதே மனிஷா கொய்ராலா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு திரைவாழ்க்கையை இழந்தார். இதனால் சில வருடம் படங்களில் நடிக்காமல் போய்விட்டார்.

இந்நிலையில், தன் வாழ்க்கையில் தான் கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து பேசிய அவர், ”நான் சில நண்பர்கள் மூலம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானேன். நான் ஆரம்பத்தில் நல்ல குணம் உடையவராக தான் இருந்தேன். ஒரு சில காட்சிகளில் நடிக்க மிகவும் கூச்சப்பட்டேன். அதனால் தான் அதுபோன்ற காட்சியில் நடிக்க குடித்துவிட்டு செல்வேன்.

குடிபோதையில் ரொமான்டிக் காட்சியில் நடித்தேன். இதனால் நாளுக்கு நாள் குடி பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன். ஆல்கஹால் ரத்தத்தில் ஊறிப்போனதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். அது அனைத்தும் நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடங்கள். பின்னர் புற்றுநோயால் போராடி குணமானேன். தற்போது ஆன்மீகம், யோகா என மிகவும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

Chella

Next Post

கம்போடியா முதல் தாய்லாந்து வரை!… வெளிநாடுகளிலும் போற்றப்படும் ராமாயணம்!… அங்கு நடக்கும் சுவாரஸ்யங்கள்!

Tue Oct 24 , 2023
இந்து மதத்தின் முக்கிய இதிகாசமான ராமாயணத்தை மக்கள் மரியாதைக்குரிய ஒன்றாக கருதுகின்றனர். வட இந்தியாவில் இராவண வதம் ஒரு திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் ராமாயணம் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. அந்த நாடுகள் குறித்து இந்த பதவில் தற்போது பார்க்கலாம். அயோத்தியா என்ற வார்த்தையில் பிறந்த தாய்லாந்தின் பழைய தலைநகரான ‘அயுத்தியா’ இன்று சுற்றுலா தலமாக உள்ளது. தாய்லாந்தில் ‘ராமகீன்’ என்ற […]

You May Like