fbpx

’நான் கொலை பண்ணல’..!! அந்தர்பல்டி அடித்த காதலி..!! ஆடிப்போன போலீஸ்..!! புயலை கிளப்பிய புதிய வாக்குமூலம்..!!

தனது காதலனை தான் கொல்லவில்லை என்றும், போலீசார் மிரட்டி அப்படி செல்ல வைத்தார்கள் என்றும் காதலி கிரீஷ்மா பிறழ் வாக்குமூலம் அளித்துள்ளது மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கேரளா மாநிலம் மூரியங்கரை பகுதியைச் சேர்ந்த ஷாரோன்ராஜ் என்ற இளைஞர், கிரிஷ்மா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். கடந்த அக்டோபர் 14ஆம் தேதி தனது வீட்டில் யாரும் இல்லை எனக் கூறி காதலன் ஷாரோனை, கிரீஷ்மா அழைத்துள்ளார். காதலி வீட்டிற்கு சென்ற ஷாரோனுக்கு சிறிது நேரத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு துடித்துள்ளார். ஷரோனின் நண்பர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஷாரோன் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஷாரோன் ராஜின் காதலியான கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தனது வீட்டிற்கு வந்த ஷாரோனுக்கு தான் ஒரு ஜூஸ் கொடுத்ததாகவும், அதன் பிறகே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும் கிரீஷ்மா தெரிவித்தார். பின்னர், அந்த ஜூஸ் பாட்டிலை பார்த்த போது தான் அது காலாவதியாகி விட்டது என்பது தெரியவந்ததாகவும் கிரீஷ்மா கூறினார்.

’நான் கொலை பண்ணல’..!! அந்தர்பல்டி அடித்த காதலி..!! ஆடிப்போன போலீஸ்..!! புயலை கிளப்பிய புதிய வாக்குமூலம்..!!

ஜூஸ் பாட்டில் எங்கே எனக் கேட்டபோது, அதற்கு அவர், கோபத்தில் அதை தூக்கி சாக்கடையில் எறிந்துவிட்டதாக கூறினார். இதனால், போலீசாருக்கு கிரீஷ்மா மீது சந்தேகம் ஏற்பட்டது. கிரீஷ்மாவிடம் தீவிர விசாரணை நடத்தியதில், விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை ஜூஸில் கலந்து கொடுத்து காதலனை கொன்றதாக வாக்குமூலம் அளித்தார். மேலும், இதற்கு முன்னர் தனது காதலனை பலமுறை கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் தமிழகம் மற்றும் கேரளாவை உலுக்கிய நிலையில், சிறையில் இருக்கும் கிரீஷ்மாவின் வாக்குமூலம் நெய்யாற்றின்கரை குற்றவியல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் அளித்த வாக்குமூலத்தில் ”தான் ஷாரோனை கொலை செய்யவில்லை என்றும் போலீசார் வேண்டுமென்றே இந்த வழக்கை தன்மீது திணித்துள்ளதாகவும்” அப்படியே மாற்றி கூறினார் கிரிஷ்மா.

’நான் கொலை பண்ணல’..!! அந்தர்பல்டி அடித்த காதலி..!! ஆடிப்போன போலீஸ்..!! புயலை கிளப்பிய புதிய வாக்குமூலம்..!!

மேலும், போலீசார் தன்னை மிரட்டி குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ள வைத்ததாகவும், அதற்கான ஆதாரங்களை அவர்கள் பொய்யாக உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார். கிரிஷ்மாவின் அந்தர்பல்டி வாக்குமூலம் இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட கிரிஷ்மா நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்தாலும், இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கிரீஷ்மா தங்களுக்கு அளித்த வாக்குமூலத்தை முழுமையாக வீடியோ எடுத்துள்ளதாகவும், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

விடிந்தால் திருமணம்..!! இரவில் மணமகனுடன் பேசிய அந்த உரையாடல்..!! திடீரென தூக்கில் தொங்கிய மணப்பெண்..!!

Mon Dec 12 , 2022
தெலங்கானாவில் திருமணத்திற்கு சில மணி நேரங்களே இருந்த நிலையில், மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் நிஜாம்பேட்டை மாவட்டம் நவிபேட் நகரை சேர்ந்தவர் ரவளி. எம்சிஏ படித்த ரவளிக்கும் மென் பொறியாளராக பணியாற்றும் சந்தோஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்துக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்த நிலையில், ரவளி வருங்கால கணவன் சந்தோஷ் உடன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. அதன்பின் […]
விடிந்தால் திருமணம்..!! இரவில் மணமகனுடன் பேசிய அந்த உரையாடல்..!! திடீரென தூக்கில் தொங்கிய மணப்பெண்..!!

You May Like