fbpx

’இனி விளையாட மாட்டேன்’..!! ஓய்வை அறிவித்தார் டுவைன் பிராவோ..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ தற்போது நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் 2024 சீசனுடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2021இல் நடைபெற்ற டி20 உலக கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்
பிராவோ.

இதுவரை தனது டி20 வாழ்க்கையில் 578 போட்டிகளில் விளையாடி 630 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் 6,970 ரன்கள் அடித்துள்ளார். 2013 முதல் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் பிராவோ, தற்போது கரீபியன் பிரீமியர் லீக்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். கிட்டத்தட்ட 100 CPL போட்டிகளில் விளையாடி இதுவரை 128 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் மூலம் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக பிராவோ இருக்கிறார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓய்வு குறித்து அவர் அறிவித்துள்ளார். “இது ஒரு சிறந்த பயணம். இன்று நான் கரீபியன் பிரீமியர் லீக்கில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்க விரும்புகிறேன். இந்த சீசன் எனது கடைசியாக இருக்கும். எனது கரீபியன் மக்கள் முன்பு எனது கடைசி கிரிக்கெட் போட்டியை விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது அணியுடன் முடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Read More : காஃபியில் சயனைடு விஷம்..!! மருமகளை தீர்த்துக் கட்டிய கணவன், மாமியார்..!! வெளியான அதிர்ச்சி காரணம்..!!

English Summary

Bravo, who has been playing for Trinbaco Knight Riders since 2013, has now announced his retirement from the Caribbean Premier League.

Chella

Next Post

பாராலிம்பிக்!. ஐந்தாவது நாளில் இந்தியா 10 பதக்கங்களைப் பெறலாம்!. முழுவிவரம்!

Mon Sep 2 , 2024
Paralympics! India can get 10 medals on day five!. Full details!

You May Like