fbpx

‘இனி அதிமுகவின் பெயர், கொடியை பயன்படுத்த மாட்டேன்’..!! ஓ.பன்னீர்செல்வம் உத்தரவாதம்..!!

மறு உத்தரவு வரும் வரை அதிமுக பெயர், கொடியை பயன்படுத்த மாட்டேன் என உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் உத்தரவாதம் அளித்துள்ளார்.

அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த கூடாது என ஓ.பன்னீர்செல்வத்திற்கு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. உத்தரவை மீறினால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரும்படி எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டோம் என ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் இன்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஓபிஎஸ் எதிராக எடப்பாடி பழனிசாமி தொடந்த வழக்கு டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஓபிஎஸ் தரப்பு உத்தரவாதம் கொடுத்துள்ளதால் இனிமேல் அதிமுகவின் கொடி, சின்னத்தை அவர் பயன்படுத்த மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Chella

Next Post

பெற்ற தாயை கவனிக்காத மகன்..!! மனைவி, குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேற உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

Thu Nov 30 , 2023
மும்பையில் உள்ள பரேல் என்ற இடத்தில் சம்படா ஹைட்ஸ் என்ற கட்டடத்தில் வசிப்பவர் துகாராம். இவர் வசிக்கும் வீடு அவரின் தாயார் பெயரில் உள்ளது. துகாராமும் அவரின் மனைவியும் சேர்ந்து துகாராமின் தாயாரை மிகவும் மோசமாக நடத்தியுள்ளனர். இதனால் தனது பெயரில் இருக்கும் வீட்டில் இருந்து தன் மகனை காலி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி துகாராமின் தாயார் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த தீர்ப்பாயம், கடந்தாண்டு […]

You May Like