fbpx

‘பாஜக ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகள் திறப்பு’..!! ’டாஸ்மாக் கடைகள் மூடல்’..!! அண்ணாமலை அதிரடி..!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இன்று 81-வது நாளாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து டாஸ்மாக் கடையை மூடிவிட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், வள்ளலாரின் கொள்கை கருணை மற்றும் வடலூரில் போலீசாரின் தடியடி நடத்தப்பட்டது ஏற்க முடியாது.

மேலும், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபரபு தாக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட செய்தியாளரை களங்கப்படுத்தக் கூடாது. உண்மை செய்திகள் வெளியிடுபவர்கள் தாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். INDIA – கூட்டணி ஒரு சீட்டுக்கட்டு போல், ஒவ்வொரு முறை குலுக்கும் போதும் ஜோக்கர் போல் ஒரு கட்சி வெளியேறுகிறது. மக்கள் மன நிலைக்கு எதிராக பிரதமர் மோடியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சேர்ந்தால் இந்த நிலை தான் ஏற்படும்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

பிப்.4ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்கிறார் விஜய்..? நாடாளுமன்ற தேர்தலில் போட்டி..?

Fri Jan 26 , 2024
விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ள நடிகர் விஜய், மக்கள் இயக்கத்தை தொடங்கி பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். குறிப்பாக கடந்தாண்டில் பல நலத்திட்டங்களை செய்தார். பள்ளி மாணவர்களிடத்தில் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொதுஅறிவு சிந்தனையை வளர்க்கும் நோக்கில் ‘தளபதி விஜய் நூலகம்’ திட்டம் தமிழ்நாடு முழுவதும் 21 இடங்களில் துவங்கப்பட்டது. […]

You May Like