காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலிக்கு ஆபத்து ஏற்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, பெண்களுக்கு வழங்கப்படும் தாய் வீட்டு சீதனத்தை பறிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. நாட்டு மக்களின் சொத்துகளை எக்ஸ்ரே எடுத்து கணக்கிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
மக்களின் சொத்துகளை பறித்து தங்கள் வாக்கு வங்கிக்கு கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பரம்பரை சொத்து வரியை அமல்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், பெண்களின் தாலிக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கடுமையாக சாடினார்.
Read More : கட்டுமான நிறுவனங்கள் வீட்டை கட்டி முடிக்க தாமதம் செய்கிறார்களா..? மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!