fbpx

தனக்கு வந்தால் தான் ரத்தம் பாணியில்… அமைச்சர் துரைமுருகன் பேசும்போது; மின்சாரத்தை துண்டித்த ரெண்டு பேர் பணியிடமாற்றம்..!

காட்பாடியில், அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 70 வருடங்களுக்கு முன்பு தான் படித்த பள்ளி என்பதால், தன்னுடைய மலரும் நினைவுகளை பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் நீண்ட நேரம் காத்துக்கொண்டு நின்றிருந்தார். மின் இணைப்பு திரும்ப வராத‌தால் எரிச்சலான அமைச்சர், இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். பிறகு, அவசர அவசரமாக மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிவிட்டு சென்றார்.

இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் பேசிக்கொண்டு இருந்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், இரண்டு பேர் பணியிடமாற்றம் செய்யப்ட்டுள்ளனர்.காட்பாடி தாராபடவேடு பகுதி துணை மின்நிலைய உதவி பொறியாளர்கள் சிவகுமார் மற்றும் கருணாநிதி பணியிடமாற்றம் செய்யப்ட்டுள்ளனர்.

Rupa

Next Post

குவைத்திற்கு சென்ற தமிழர் சுட்டுக் கொலை …வேலைக்கு சென்ற நான்கே நாளில் பரிதாபம்…

Tue Sep 13 , 2022
திருவாரூர் அருகே குவைத்தில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நபரை அங்கு சுட்டுக் கொன்றுவிட்டதாக வந்த தகவலால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலை தமிழகம் கொண்டு வரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே லட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் தன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடன் வாங்கியுள்ளதால் பெரும் சிரமமாக இருந்துள்ளது. வெளிநாட்டிற்கு வேலை செய்ய வேண்டும் […]

You May Like