fbpx

Modi அதை மட்டும் செய்துவிட்டால் நாங்க போட்டியில் இருந்து வாபஸ்…! சவால் விடுத்த சீமான்…!

பிரதமர் மோடி ஒரே ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்தித்தால் நாங்கள் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றுவிடுகிறோம் என சீமான் சவால் விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அந்தியூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் சீமான். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி ஒரு நல்ல தலைவர், நல்ல ஆட்சியாளர் என்றால் ஒரே ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும். பிரதமர் மோடி ஒரே ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்தித்தால் நாங்கள் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றுவிடுகிறோம்.

மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் பிஎம்கேர்ஸ்-க்கு எதிராக கேள்விகளை கேட்டார். அவர் கேட்ட கேள்விகளுக்கு وو பிரதமர் மோடியிடம் பதில் இல்லை. பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்துவிட்டு இனிமேல் புதிய இந்தியாவை உருவாக்க வாய்ப்பு வந்துவிட்டது என்கிறார் பிரதமர் மோடி. பத்தாண்டுகள் காங்கிரஸ், பத்தாண்டுகள் பாஜக என என் வாழ்நாளில் பாதி கழிந்துவிட்டது. ஆனால், இந்த நாட்டில் என்ன நடந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி முடிந்தபிறகு வந்த மோடி இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறினார்.

Vignesh

Next Post

சூப்பர் வாய்ப்பு...! SSC காலி பணியிடங்கள் அறிவிப்பு...! 10,12-ம் வகுப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்...!

Thu Apr 11 , 2024
மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் 2024″-க்கான காலி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அலுவலகங்களில் எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர் போன்ற ‘சி’ பிரிவு பணிகளுக்கான போட்டித் தேர்வை பணியாளர் தேர்வாணயம் நடத்துகிறது. இதற்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். பணியின் பெயர், வயது வரம்பு, கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வு முறை, எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் […]

You May Like