fbpx

’இதே நிலை நீடித்தால்’..!! ’ரேஷன் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு’..!! எச்சரிக்கும் அண்ணாமலை..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில்யாத்திரை மேற்கொண்டுள்ளார். அதன்படி, டெல்டா மாவட்டங்களிலும் யாத்திரை மேற்கொண்டார். அப்போது விவசாயிகளை சந்தித்து பேசினார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்,

கடந்த 2018இல் பிரதமர் மோடி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தார். அதன் பிறகு, கடந்த 5 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்து போது, காவிரி நதி நீர் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் டெல்டா பகுதிக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மேகதாது அணையைக் கட்டுவோம், காவிரி நதி நீர் தர மாட்டோம் என்று கூறி, காவிரி நீர் கிடைக்காமல் நம் கண் முன்னால் நிலங்கள் தரிசு நிலமாக மாறிக் கொண்டிருக்கின்றன.

தஞ்சை, திருவையாறு உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்தான் இந்தியா முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்குச் செல்கிறது. கடந்த 2022 செப்டம்பர் 1 முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை, தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசு 8,25,000 டன் நெல்லைக் கொள்முதல் செய்தது. ஆனால், இந்தாண்டு அதே காலகட்டத்தில் 5,25,000 டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் குறைந்த காரணத்தினால், இந்த ஒரு ஆண்டு மட்டும் 3 லட்சம் டன் நெல் மகசூல் குறைந்திருக்கிறது.

தங்கள் நிலத்தைத் தாய்க்குச் சமமாக மதிக்கிறவர்களே டெல்டாக்காரர்கள். விவசாயம் என்றால் என்ன என்று தெரியாத, விவசாயிகள் கஷ்டம் அறியாத முதலமைச்சர் ஸ்டாலின், தன்னை டெல்டாக்காரன் என்று கூறிக் கொள்வது நகைச்சுவை. காவிரியில் நீர் திறக்காமல் டெல்டாவை வஞ்சிக்கும் தங்கள் கூட்டணிக் கட்சி காங்கிரஸை இதுவரை கண்டித்திருப்பாரா? இதே நிலை தொடர்ந்தால், இன்னும் இரண்டு ஆண்டுகளில் ரேஷன் கடைகளில் நம் மக்களுக்கு அரிசி கிடைப்பதே தட்டுப்பாடாகிவிடும்“ என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

மக்களே அலெர்ட்..!! வானிலை ஆய்வு மையம் சொன்ன தேதி இன்னைக்கு தான்..!! பெருசா சம்பவம் இருக்கு..!!

Mon Nov 27 , 2023
இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு […]

You May Like