fbpx

#Breaking : நீர்நிலையில் கழிவு நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி…

நீர்நிலை, காலி இடங்களில் கழிவுநீரை வெளியேற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது..

இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உரிமம் இல்லாத லாரிகள் மூலம் கழிவு நீர் சட்டவிரோதமாக வெளியேற்றப்படுவதாக தொடர்ந்து புகார் வந்தது.. இதை தொடர்ந்து வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நாட்களில் மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.. அதில், குறிப்பாக சென்னை மற்றும் புறநகரில் கழிவு நீர், நீர் நிலைகள் மற்றும் காலி இடங்களில் சட்ட விரோதமாக வெளியேற்றப்படுவது கண்டறியப்பட்டது..

எனவே நீர்நிலை, காலி இடங்களில் கழிவுநீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. அந்த வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.. உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து தகுந்த உரிமம் பெற்ற டேங்கர் லாரிகள் மூலமே கழிவு நீரை அகற்ற வேண்டும்.. இந்த விதிகளை மீறுவோர் மீது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மின்னஞ்சல் மூலம் புகாரளிக்கலாம்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

”என்ன எதுக்குயா தூக்குனீங்க”..!! ’சிறந்த ஊழியர்’ விருது வாங்கியவருக்கே இந்த நிலைமையா..?

Tue Feb 28 , 2023
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், உலகளவில் பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆல்பபெட் 12,000 ஊழியர்களை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கப்போவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி இந்தியாவில் 450 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்நிலையில், ஐதராபத்தைச் சேர்ந்த ஹர்ஷ் விஜய்வர்கியா கூகுள் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். […]

You May Like