fbpx

அடிபட்டு ரத்தம் நிற்காமல் வருகிறதா, இதன் சாற்றை விட்டாலே போதும்..! ஏரளமான மருத்துவ குணங்கள் நிறைந்த தாத்தா தலைவெட்டி பூச்செடி..!

விஷத் தன்மையை முறிக்கும், புண்களை ஆற்றும், மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்தும் உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளை குணப்படுத்தும் மூக்குத்தி பூச்செடி எனும் தாத்தா தலைவெட்டி பூச்செடியின் எண்ணற்ற மருத்துவ குணங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தாத்தா தலைவெட்டிப் பூச்செடியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இது புல்வெளிகள் நிறைந்த அனைத்து இடங்களிலும் புதர்போல் மண்டிக் கிடக்கும். இதற்கு மூக்குத்திப் பூச்செடி, தாத்தா பூ செடி, கிணத்து பூண்டு செடி என பல்வேறு பெயர்கள் உண்டு. மஞ்சள், வெள்ளை, ஊதா நிறங்களில் பூக்கள் இருக்கும். காய்கள் மிளகை போன்று காணப்படும். காய்களில் விஷத்தன்மை உடையதால் இதை சாப்பிடக் கூடாது.

புண்களை ஆற்றும் , விஷத் தன்மையை முறிக்கும் , மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்தும் , மூட்டு வலியை மாயமாக்கும், சளி, இருமல் உள்ளிட்டவைகளுக்கு மருந்தாக அமைகிறது இந்த மூக்குத்தி பூச்செடி. உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் இரத்தம் நிற்காமல் சென்றால் அந்த இடத்தில் மூக்குத்திப் பூ இலையின் சாரை விட்டால் உடனடியாக இரத்தம் அதிகம் போவது நின்று விடும்.

முழங்கால் வலி, மூட்டு வலி போன்றவற்றிற்கு சிறிது நல்லெண்ணை விட்டு அதில் இலை பூ வேர் போன்றவற்றை போட்டு சிறிது வதக்கி மூட்டு வலி உள்ள இடத்தில் கட்டி விடுங்கள் வலி உடனடியாக தீர்ந்துவிடும். பெறிய அல்லது நீண்ட நாட்கள் ஆறாமல் இருக்கும் புண்கள் மீது மூக்குத்தி பூ செடியின் இலையை தேவையான அளவு பிடிங்கி சிறிது தண்ணீர் விட்டு அறைத்து காயங்களுக்கு போட்டு வந்தால் எப்படி பட்ட புண்களாக இருந்தாலும் எளிதில் ஆறி விடும். சர்க்கரை நோயாளிகளின் புண்களை கூட இது எளிதாக குணப்படுத்தும் தன்மை கொண்ட இந்த செடியின் சாறை இலை உடன் சேர்த்து தேய்த்து வந்தால் தேமல் 2,3 நாட்களில் மறையும்.

Kathir

Next Post

கல்வி உதவித் தொகை பெற ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்...!

Mon Jan 8 , 2024
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்வி உதவித் தொகைக்கு ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆகிய வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்குக் கல்வி […]

You May Like