fbpx

”நாக்கை கடித்துக் கொண்டால் சாதாரணமா விட்றாதீங்க”..!! கோமா நிலைக்கு சென்று உயிர் பிழைத்த பெண்..!!

பேசும்போது அல்லது உணவுகளை சாப்பிடும்போது தவறுதலாக நாக்கை கடித்துக் கொள்வது உண்டு. இவ்வாறு நாக்கை கடித்துக்கொள்வதன் மூலம் சிறு காயங்கள் ஏற்படும்.
சில சமயங்களில் வேகமாக நாக்கை கடித்தால் பெரிய காயங்கள் ஏற்பட்டு உணவு உண்ண முடியாத நிலை கூட ஏற்படலாம். பெரும்பாலும் இதற்கு மருத்துவ சிகிச்சை எதுவும் தேவைப்படுவதில்லை. நாம் எப்போதும் போல நம்முடைய வேலைகளை பார்க்க தொடங்கிவிடுவோம்.

ஆனால், இதேபோன்று அலட்சியமாக இருந்த ஆஸ்திரேலிய பெண் ஒருவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கெய்ட்லின் அஸ்லோப் என்ற 27 வயது இளம்பெண் தன்னுடைய தோழிகளுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, தவறுதலாக நாக்கை கடித்து விட்டதால் மிகுந்த துன்பத்திற்கு ஆளானார். ஆனால், பிரச்சனை இத்தோடு முடியவில்லை. அடுத்தடுத்த நாட்களில் வெவ்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு ஆளானார். இறுதியாக மூச்சு விடுவதற்கே சிரமம் ஏற்பட்ட சூழலில், உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்பட்டுவிட்டது.

முன்னதாக, நாக்கு கடிபட்ட நிலையில், கெய்ட்லினுடைய பேச்சு குளறுபடியாக தொடங்கியது. இதையடுத்து, மருத்துவரிடம் சென்றார். அப்போது அந்தப் பெண்ணுக்கு மருத்துவர்கள் சில மாத்திரைகளை பரிந்துரை செய்தனர். கடிபட்டதால் ஏற்பட்ட அலர்ஜியின் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதினர். ஆனால், வேறு பல சிக்கல்களை கெய்ட்லின் எதிர்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”என்னுடைய சருமம் சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் மாறிவிட்டது. தோல் உறிந்து கொட்ட தொடங்கியது. என் நாக்கு கருப்பு நிறமாக மாறிவிட்டது. இதுகுறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை செய்தபோது உடல் உறுப்புகளை வெட்டி அப்புறப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்” என்று தெரிவித்தார்.

ஆனால், கெய்ட்லினுக்கு ஏற்பட்டிருப்பது அரிதான Ludwig’s angina என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர். பெரியவர்களுக்கு முளைக்கும் ஞானப்பல் காரணமாக இந்தப் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு செப்சிஸ் மற்றும் உறுப்பு செயலிழப்பு ஏற்படும் என்பதையும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர். இந்நிலையில், கெய்ட்லினுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவரை கட்டாய கோமா நிலைக்கு மருத்துவர்கள் கொண்டு சென்றுள்ளனர். ஏனென்றால் உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவை தக்க வைப்பது, மூச்சுப் பாதையை சீரமைப்பது, உறுப்புகளின் செயலிழப்பை தடுப்பது போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ள இந்த கோமா நிலை கட்டாயமாகும். போராட்டம் மிகுந்த இந்த சிகிச்சைகளுக்குப் பிறகு இப்போது கெய்ட்லின் குணமாகியிருக்கிறார். தனக்கு இரண்டாவதாக உயிர் கொடுத்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினருக்கு அவர் நன்றியை வெளிப்படுத்தினார்.

Chella

Next Post

வீட்டுக் கடன் வாங்கப்போறீங்களா..? சோலார் யூனிட்..!! இது கட்டாயமாம்..!! எஸ்பிஐ வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Tue Sep 19 , 2023
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செயல்படுத்தி வருகிறது. அவ்வப்போது இந்த திட்டங்களில், சிறப்பு சலுகைகளையும் அறிவித்துள்ளது. அதிலும், கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பின்றி, பொதுமுடக்கத்தில் அவதிப்பட்டபோது, சிறப்பு சலுகை ஒன்றை எஸ்பிஐ அறிவித்திருந்தது. ஏதாவது அவசர காரணத்துக்காக உங்களுக்கு பணம் தேவைப்பட்டால், வீட்டிலிருந்தபடியே 45 நிமிடங்களுக்குள் கடனை பெற்றுக் கொள்ளலாம் என்றும், 6 மாதத்துக்கு மாத தவணை கட்ட வேண்டியதில்லை என்றும் அறிவித்திருந்தது. […]

You May Like