fbpx

’இன்னைக்கு மட்டும் பெயில் கிடைக்கலைனா அவ்வளவு தான்’..!! சோகத்தில் செந்தில் பாலாஜி..!! சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை..!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும், பிணை வழங்க கோரியும் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தார். அவர் தொடுத்த மனு மீதான விசாரணையை இன்று விசாரிப்பதாக கடந்த 6ஆம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவித்தது. கடந்த 2 முறை வழக்கு ஒத்திக்கப்பட்ட நிலையில், கடந்த 6ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை சார்பில் வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் இதற்கு வழக்கை ஒத்திவைக்கக் கூடாது. அதற்கு அனுமதிக்கவே கூடாது என்று செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும், வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள் மே 15ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று கூறினார். மேலும் மே 15ஆம் தேதி, அதாவது இன்று நிச்சயம் விசாரணை நடைபெறும் என உறுதி அளித்துள்ளனர்.

ஆனால், மே 18ஆம் தேதியில் இருந்து ஜூலை 7ஆம் தேதி வரை உச்சநீதிமன்றத்தில் கோடை விடுமுறை விடப்படும். இதனால் மே 15 ஆம் தேதி நிவாரணம் கிடைக்க வேண்டும். அப்போது பெயில் கிடைக்கவில்லை என்றால் பிறகு ஒன்றரை மாதம் செந்தில் பாலாஜி சிறையில் இருக்க வேண்டியிருக்கும்.

Read More : BREAKING | ’நேற்று தடை… இன்றே வாபஸ் வாங்கிய தமிழ்நாடு அரசு’..!! என்ன காரணம்..?

Chella

Next Post

இறந்தது ஜெயக்குமாரே இல்லையா?… 2 வாரமாக விலகாத மர்மம்…கடிதத்தில் சபாநாயகர் அப்பாவு பெயர்!

Wed May 15 , 2024
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில் 2 வாரங்களாகியும் இன்னும் துப்பு துலங்கவில்லை. அவர் எழுதியதாகக் கூறப்படும் 2 கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தவர்கள் உள்பட 32 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பான வழக்கு ஒருவாரத்தை கடந்தும் இன்னும் மர்மம் விளங்கவில்லை. மேலும் ஜெயக்குமார் எழுதியதாகக் கூறப்படும் முதல் கடிதத்தில் சபாநாயகர் அப்பாவு பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் சொல்லப்படுகிறது. மேலும் அவரிடம் தேவைப்பட்டால் […]

You May Like