fbpx

வெட்கம், மானம் இருந்தா தூக்கு மாட்டி சாவு..!! மகளிர் ஆணையத்தை கிழித்த மன்சூர் அலிகான்..!!

நடிகை திரிஷா குறித்து கேவலமாக நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. தற்போது அதுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லியோ படத்தில் திரிஷா உடன் நடிக்கிறேன் என்றதும், நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும், நடிகை குஷ்பூ, ரோஜாவை மாதிரி கட்டிலில் தூக்கி போடலாம் என நினைத்தேன் என்று மிகவும் அசிங்கமாக பேசினார் மன்சூர் அலிகான். இதனால் கடும் கோபத்திற்கு ஆளான நடிகை திரிஷா, மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்று வெளியிட்டு இருந்தார். பின்னர், இயக்குனர் லோகேஷ் கனகராஜும் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இதை தொடர்ந்து, நடிகை த்ரிஷாவை பற்றித் தான் தவறாக ஏதும் பேசவில்லை என்றும் தன்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் நடவடிக்கை எடுத்ததன் மூலம் நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. இவ்விவகாரத்தில் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மகளிர் ஆணையம் என்ன கிழித்துக் கொண்டிருக்கிறது என நடிகர் மன்சூர் அலிகான் பத்திரிகையாளர் சந்திப்பில் கொந்தளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, நடிகர் சங்கம் மன்சூர் அலிகான் த்ரிஷா விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இப்படியான நிலையில், மன்சூர் அலிகான் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், ‘நான் எந்த பெண்களையும் தவறாக நினைக்க மாட்டேன். எல்லோரையும் அரவணைத்து தான் செல்வேன். தமிழ்நாடே என் பக்கம் தான் உள்ளது. இந்த பூச்சாண்டி வேலைகளுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன். நடிகை குஷ்பூ, தேசிய மகளிர் ஆணையத்தை பார்த்து கேட்கிறேன். இதெல்லாம் ஒரு விஷயமா?

மூத்த நடிகர் எஸ்.வி.சேகர், காரைக்குடியில் ஷர்மா குஷ்பூ பற்றி அவதூறு பேசினார்களே. அவர்கள் பாஜகவில் தானே இருக்கிறார்கள். கைது பண்ண சொல்ல வேண்டிதானே. நீட் தேர்வுக்கு அனிதா தற்கொலை செய்துக் கொள்ளும் போது இந்த மகளிர் ஆணையம் என்ன செய்துக் கொண்டிருந்தது. வெட்கம், மானம், சூடு, சுரணை இருந்தா நீ தூக்கு மாட்டி சாவு.

மணிப்பூரில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது என்ன செஞ்சிட்டு இருந்தீங்க? மன்சூர் அலிகான் என்றால் இளிச்சவாயனா?. ஒழுங்கா நடந்துகோங்க. நான் எந்திரிச்சா ஒரு பிரளயமே கிளம்பும்” என மன்சூர் அலிகான் பேசியுள்ளார்.

Chella

Next Post

தமிழ்நாட்டில் மீண்டும் அதிர்ச்சி..!! பள்ளி மாணவர்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு..!!

Tue Nov 21 , 2023
காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள மினி குடிநீர் தொட்டியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று மதிய உணவு இடைவேளையில் பள்ளி மாணவர்கள் அனைவரும் உணவு அருந்தத் தயாராகியுள்ளனர். அப்போது தட்டுகளைக் கழுவுவதற்காகக் குடிநீர் தொட்டிக்குச் சென்றுள்ளனர். குடிநீர் தொட்டியிலிருந்து துர்நாற்றம் அடித்துள்ளது. பின்னர் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் […]

You May Like