தற்போது பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்கள் ஆன்லைனில் நல்ல தொகைக்கு விற்கப்படுகின்றன.. மேலும் பலர் அரிதான பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குவதற்கு அதிக பணத்தை செலவழிக்க தயாராக உள்ளனர். அந்த வகையில், இந்த அரிய 1 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், வீட்டில் இருந்தபடியே 7 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இந்த குறிப்பிட்ட 1 ரூபாய் நோட்டின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்து இந்திய அரசு முற்றிலும் நீக்கியது. எனினும் இந்த நோட்டை அச்சடிக்கும் பணி ஜனவரி 2015ல் அரசால் மீண்டும் தொடங்கப்பட்டு, மீண்டும் சந்தைக்கு வந்தது.
இந்த ஒரு ரூபாய் நோட்டின் மூலம் 7 லட்சம் ரூபாய் பெற வேண்டுமானால், அந்த 1 ரூபாய் நோட்டு இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே அச்சடிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில், கவர்னர் J.W. கெல்லியின் கையொப்பம் கட்டாயம் இருக்க வேண்டும்.. இந்த நோட்டை ஆன்லைனில் விற்க விரும்பினால், OLX இல் கணக்கை உருவாக்க வேண்டும்.. முதலில் OLX இல் விற்பனையாளராகப் பதிவு செய்து பின்னர் கணக்கை உருவாக்க வேண்டும். அதன் பிறகு, ரூபாய் நோட்டின் இருபுறமும் உள்ள படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
உங்கள் மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி மற்றும் பிற சரிபார்ப்பு விவரங்களை இணையதளத்தில் உள்ளிட வேண்டும், அதன் பிறகு, அந்த ரூபாய் நோட்டை வாங்க வேண்டும் என்று நினைக்கும் நபர், உங்களை தொடர்பு கொள்வார்.. அவரிடம் பேசி நல்ல விலைக்கு உங்கள் ரூபாய் நோட்டை விற்கலாம்.
இதனிடையே ஆன்லைனில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்தது.. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் “ பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குதல் மற்றும் விற்பது தொடர்பான பரிவர்த்தனைகளில், இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர்/லோகோவைப் பயன்படுத்தி, பொதுமக்களிடம் இருந்து கட்டணங்கள்/ கமிஷன்/ பெற மோசடியாகப் பயன்படுத்துவதாக இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளது. ரிசர்வ் வங்கி இது போன்ற விஷயங்களை கையாள்வதில்லை.. எந்த விதமான கட்டணங்கள்/கமிஷன்களையும் கோருவதில்லை..” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..