fbpx

இதில் முதலீடு செய்தால் பெரியளவில் வருமானம் பார்க்கலாம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

நீண்டகால முதலீடுகளில் பணத்தை செலுத்தி நல்ல ரிட்டன்களை பெற நினைப்பவர்களுக்காகவே பல்வேறு முதலீடு ஆப்ஷன்கள் இருக்கின்றன. அவற்றில் உங்களது பணத்தை முதலீடு செய்து உங்கள் பணம் பல மடங்காக வளர்வதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். மியூச்சுவல் பண்டுகள் முதல் ரியல் எஸ்டேட் வரை பணத்தை சேமித்து பெரிய அளவிலான ரிட்டன்களை பெறுவதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன. அது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மியூச்சுவல் ஃபண்டுகள் என்பது முதலீட்டு கருவிகளாக பார்க்கப்படுகிறது. இதில், முதலீட்டாளர்கள் குழு தங்களது பணத்தை ஸ்டாக்குகள், பாண்டுகள் மற்றும் பிற செக்யூரிட்டிகளில் முதலீடு செய்வார்கள். இந்த முதலீட்டாளர்களுக்கு பதிலாக பணத்தை பல்வேறு முதலீடுகளை வாங்குவதற்கு தொழில்முறை நிதி மேலாளர் ஒருவர் நியமிக்கப்படுவார். சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் அல்லது SIPஇல் உங்களது பணத்தை முதலீடு செய்வதை கருத்தில் கொள்ளலாம்.

இதில் ஒரேடியாக பெரிய அளவிலான தொகையை முதலில் செய்வதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை முதலீடு செய்ய வேண்டும். ஆண்டுக்கு 20 முதல் 25 சதவீதம் வரை ரிட்டன்களை வழங்கக்கூடிய பல்வேறு ஸ்மால் கேப் அல்லது மிட்-கேப் ஃபண்டுகளும் உள்ளன. படுக்கடன் ஆவணம் என்பது பணம் அல்லது வருமானத்தை உருவாக்குவதற்கு தனி நபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசுகள் கொண்டிருக்கக் கூடிய ஒரு சொத்து. நிரந்தர வருமானம் பெறும் சொத்து வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய அளவிலான தொகையை வழங்குவதன் மூலமாக முதலீட்டாளர்கள் வழக்கமான இடைவெளியில் வட்டி தொகையை பெறுவார்கள்.

இதற்கான வட்டி முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுகிறது. இதில் ஒரு நிறுவனத்திற்கு நீங்கள் கடன் வழங்குகிறீர்கள். இது ஒரு அற்புதமான ஆப்ஷன் மற்றும் அதிக ரிட்டன்களை பெற்றுத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பணத்தை திருப்பி தருவதற்கான பொறுப்பு முழுக்க முழுக்க நிறுவனத்தை சார்ந்தது. இதன் மூலமாக நீங்கள் நீண்ட கால மற்றும் குறுகிய கால முறையில் பணத்தை சம்பாதிக்கலாம். இந்தியாவில் பெரும்பாலானவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதில் ஆர்வம் காட்டுவது வழக்கம். தங்கத்தில் முதலீடு செய்ய பல்வேறு விதமான திட்டங்கள் கிடைக்கிறது. டிஜிட்டல் கோல்டு மற்றும் சாவரின் தங்க பத்திரங்களிலும் நீங்கள் முதலீடு செய்யலாம்.

பங்கு சந்தை மூலமாகவும் பெரிய அளவிலான வருமானத்தை உங்களால் பெற முடியும். ஆனால், பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பதற்கு அங்கு நடந்து கொண்டிருக்கும் விஷயங்கள் குறித்து நீங்கள் எப்பொழுதும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பங்கு சந்தையில் அதிக ரிட்டன் கொண்ட பங்குகளில் நீங்கள் முதலீடு செய்து இருக்கிறீர்கள் என்றால், அதனை நீண்ட காலத்திற்கு அப்படியே விட்டுவிட்டு அதிலிருந்து 100 முதல் 200 சதவீதம் வரையிலான ரிட்டன்களை கூட உங்களால் பெற முடியும்.

தங்கத்தைப் போலவே பெரிய அளவிலான ரிட்டன்களை பெறுவதற்கு ரியல் எஸ்டேட் ஒரு அற்புதமான முதலீடாக உள்ளது. ஒருவேளை உங்களிடம் நிலம் அல்லது வீடு இருந்தால் உங்கள் வீட்டை வாடகைக்கு விடுவதன் மூலமாக அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் நீங்கள் வருமானத்தை ஈட்டலாம்.

Read More : கர்ப்ப காலத்தில் பெண்கள் வெண்டைக்காய் சாப்பிடலாமா..? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்..?

Chella

Next Post

மனைவியுடன் இயற்கைக்கு மாறான உறவு கொள்வது பலாத்காரம் ஆகாது..!! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

Sat May 4 , 2024
மனைவியுடன் இயற்கைக்கு மாறான உறவு கொள்வது பலாத்காரம் ஆகாது என்று மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருக்கு எதிராக கோத்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த 2019ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட அந்த புகாரில் தங்கள் திருமணத்திற்கு பிறகு தன்னிடம் பலமுறை இயற்கைக்கு மாறான முறையில் கணவர் உறவு கொண்டார். கணவரது இந்த செயலுக்கு எதிராக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று […]

You May Like