fbpx

இனி போன் எடுத்து பேசினால் ’ஹலோ’ சொல்லக்கூடாது … ’’வந்தே மாதரம் என்றுதான் கூறவேண்டும்’’ – அரசு உத்தரவு

இனி செல்போன் எடுத்து பேசும்போது ஹலோ என சொலலாமல் அதற்கு பதில் வந்தே மாதரம் என்றுதான் கூற வேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள்  மற்றும் அரசு ஊழியர்களிடம் இருந்து அழைப்புகளை ஏற்று பதில் கூறும்போது அவர்களிடம் ’ஹலோ ’’ என கூறாமல் ’வந்தே மாதரம் ’’ என கூற வேண்டும். இது அரசு உள்ளாட்சி அமைப்புகள் , அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்குப் பொருந்தும் என கூறப்பட்டிருக்கின்றது.

மேலும் அந்த அறிக்கையில் ஹலோ என்ற வார்த்தை அர்த்தமற்றது எனவும் வந்தே மாதரம் என தொடங்கும்போது நேர்மறையான சூழ்நிலையை உருவாக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவை பா.ஜ பாராட்டியுள்ளது. சமாஜ்வாடி கட்சியினர் இதுமக்களை பிளவுபடுத்தும் செயல் என தெரிவித்துள்ளது. பா.ஜ.கவின் அழுத்தத்தால் ஏக்நாத் ஷிண்டே இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Next Post

பூஜா ஹெக்டே மூக்குக்கு அறுவைசிகிச்சை செய்யப்போகின்றாரா?

Sun Oct 2 , 2022
பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே தனது மூக்கிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்போவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. தமிழில் ’முகமூடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே . பின்னர் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். முன்னணி கதாநாயகர்களுடன் ஏராளமான தெலுங்கு திரைப்படங்கள் நடித்து அந்த படங்கள் வெற்றியானதை அடுத்து மீண்டும் தமிழில் பீஸ்ட் திரைப்படம் நடித்தார். தெலுங்கில் மகரிஷி, ராதே ஷ்யாம் , ஆச்சார்யா , ஒக்கலைலா […]

You May Like