அரசு அலுவலகத்திற்கு வரும் பெண்களை பாலியல் இச்சைக்கு பயன்படுத்த நினைத்த விஏஓ-வின் செயல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உறையூர் கிராமத்தை சேர்ந்த 47 வயது பெண் ஒருவர், தனது கணவரை இழந்து தனியாக வசித்து வருகிறார். இவர், தனது கணவரின் பெயரில் இருக்கும் நிலத்தை விற்பனை செய்ய முயற்சித்தபோது, கணவரின் இறப்பு சான்றிதழில் பிழை இருப்பதை கண்டறிந்துள்ளார். அந்த பிழையை திருத்த வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தும் இருந்தார். ஆனால், அங்கு விஏஓ-வாக பணியாற்றிய வெங்கடாசலம் என்பவர், பெண்ணை வீட்டிற்கு அழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

அதன்பின்னர் வெங்கடாசலத்திடம் பெண்மணி கையெழுத்து கேட்க, சல்லாப எண்ணம் கொண்ட வெங்கடாசலம், “நீ பண்ரூட்டி வந்தால் நான் உன்னை அழைத்து வருவேன். இன்று நீ வாயேன். நீ வாந்தால் மட்டுமே போதும். நான் ஒரு மாதம் கழித்துதான் அலுவலகத்திற்கு வருவேன்” என்று கூறி பாலியல் தொல்லை அளித்துள்ளார். வெங்கடாசலத்தின் பாலியல் தொல்லை தொடரவே, ஒருகட்டத்தில் விரக்தியடைந்த அந்த பெண், ஆடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், புகாரை ஏற்ற காவல்துறையினர், மதுபோதையில் பெண்களிடம் சல்லாபத்தை தொடரும் வெங்கடாசலத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் தட்டிக்கழிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இதில், வெங்கடாசலம் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.