தொலைத்தொடர்புத் துறை, தமிழ்நாடு எல்எஸ்ஏ, மத்திய உளவுத்துறை, தமிழ்நாடு காவல்துறை, ஏர்டெல் தமிழ்நாடு ஆகியவற்றின் அதிகாரிகள், மத்திய உளவுத்துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சென்னை கிண்டியில் சந்தேகத்திற்குரிய இடத்தில் சோதனை செய்து, அங்கு சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தொலைத்தொடர்பு அமைப்பைக் கண்டுபிடித்தனர்.
உரிமம் பெற்ற ஐ.எல்.டி.ஓ நெட்வொர்க்கைத் தவிர்த்து சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்ற சந்தாதாரர் அடையாள தொகுதி (சிம்) பெட்டிகள் மற்றும் சிம் அடிப்படையிலான வயர்லெஸ் இணைய ரூட்டர் / எஃப்.டி.டி.எச் ரூட்டர் ஆகியவற்றைக் கொண்ட சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
இத்தகைய சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் அரசுக் கருவூலத்திற்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற சட்டவிரோத செயல்களைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஏர்டெல் தமிழ்நாடு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
உள்ளூர் சி.எல்.ஐ அல்லது தங்கள் தொலைபேசியில் எந்த எண்ணும் காட்டப்படாத சர்வதேச அழைப்பைப் பெறுவது குறித்து 1800 110 420 அல்லது 1963 என்ற கட்டணமில்லா எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளவும்.