கடந்த ஆண்டு ஜூலை மாதம் ( 24.07.2022) 7301 பணியிடங்களுக்காக, சுமார் 18 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 போட்டி தேர்வுக்கான முடிவுகள், அக்டோபர் மாதமே வரவேண்டிய நிலையில் இன்னும் வரவில்லை, மகளிர் இட ஒதுக்கீட்டில் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பெயரில் திருத்தம் செய்யப்பட்ட முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக் அறிவிக்கப்பட்டது.
மேலும் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் படி டிசம்பர் மாதம் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் தள்ளிப்போனது. ஜனவரியில் முடிவுகள் வெளியிடப்படும் என்று தகவல்கள் வந்த நிலையில், தற்போது டிஎன்பிஎஸ்சி முடிவுகள் எப்போது என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி 7,301 பணியிடங்களுக்கான குரூப் 4 போட்டி தேர்வு முடிவுகள் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில தினங்கள் முன்பு குரூப் 4 பணியிடங்களில் 2500 பணியிடங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 7,301 பணியிடங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.