fbpx

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை கிடையாது!!!

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. அந்த விடுமுறை தினத்தை சமன் செய்யும் வகையில் வாரம் தோறும் சனிக்கிழமை நாட்களில் பள்ளிகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்திலும் இன்று(டிசம்பர்-3) பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ”தொடர் பெரும் மழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த விடுமுறையை சரி செய்யும் வகையில் 3-ம் தேதி சனிக்கிழமை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திங்கள்கிழமை பாட அட்டவணை பின்பற்றி செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார். மேலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை இன்று வகுப்புகள் கிடையாது. இவர்களுக்கு வழக்கமான வாரவிடுமுறை தினமாக இருக்கும். 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

Kathir

Next Post

தமிழக கோவில்களில் இனி "கலாச்சார உடையில் தான் பக்தர்கள் வரவேண்டும்" செல்போன் பயன்படுத்த தடை!!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

Sat Dec 3 , 2022
தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும், மேலும் பக்தர்கள் கலாச்சார உடை அணிந்து வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கோவில்களில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த சீதாராமன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்து […]

You May Like