சென்னை அடுத்த கோவிலம்பாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி 10 வயது சிறுமி உயிரிழப்பு. தாய் கீர்த்தியுடன் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார் 10 வயது சிறுமி லியோர ஸ்ரீ. அப்போது கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார் சிறுமி. பின்னால் அதி வேகமாக வந்த தண்ணீர் லாரி வாகனம், சிறுமி மீது மோதியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து நடந்த பிறகு, தண்ணீர் லாரியை சாலையில நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். தப்பி ஓடிய ஓட்டுநர் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தாயுடன் பள்ளிக்கு சென்றபோது தண்ணீர் லாரி சக்கரத்தில் மாட்டி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.