fbpx

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான குடில்களில்; அதிகாரிகளுக்கு கறிவிருந்தா?… பக்தர்கள் கொந்தளிப்பு..!

திருத்தணியில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மற்ற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் கார்த்திகேயன் இல்லத்தில் குடில்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் முருகன் கோவில் தொடர்புடைய வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவில் அரக்கோணம் சாலையில் இருக்கும் கார்த்திகேயன் குடில்களில் கோவில் சூப்பிரண்ட்கள் கலைவாணன், வித்தியாசாகர் இருவருக்கும் சிக்கன், மட்டன், முட்டை போன்ற அசைவ உணவுகளை கோவில் ஊழியர்களே பரிமாறுகின்றனர். சூப்பிரண்டுகள் இருவரும் ருசித்து சாப்பிடுகின்றனர். இந்த வீடியோ தற்போது பரவி வருகிறது.

வீடியோவை பார்த்த முருக பக்தர்கள், பொதுமக்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் கோவில் சூப்பிரண்டுகளுக்கு கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். பக்தர்கள் தங்குகின்ற அறையில் சைவத்தைத் தவிர மற்ற உணவுகளுக்கு அனுமதி இல்லை என தெரிந்தும் விதிகளை மீறிய ஊழியர்கள் மீது இந்து அறநிலைத்துறை ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Rupa

Next Post

பொதுமக்களே கவனம்... இன்று முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்...! என்னென்ன தெரிந்து கொள்ளுங்க...

Thu Sep 1 , 2022
நிதி பரிவர்த்தனைகளில் இன்று முதல் பல மாற்றங்கள் ஏற்படும், இது அனைத்து மட்டங்களிலும் உள்ள நுகர்வோரை நேரடியாக பாதிக்கும். இந்த மாற்றங்களில் சுங்கக் கட்டணம், தேசிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் சொத்து விலைகள் ஆகியவை அடங்கும். யமுனா எக்ஸ்பிரஸ் பாதை கட்டண உயர்வு நீங்கள் யமுனா எக்ஸ்பிரஸ் பாதையில் அடிக்கடி பயணிப்பவராக இருந்தால், YEIDA சுங்கவரியை உயர்த்தியுள்ளதால், இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு கிலோமீட்டருக்கு 10 பைசா செலுத்த வேண்டும். கார்கள், […]

You May Like