fbpx

தமிழகத்தில் தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு..!! வலுக்கும் கோரிக்கை

தீபாவளிக்கு அடுத்த நாள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், பணியாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று கொண்டாடுவது வழக்கம். சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறையாக வருவதால், இந்தாண்டு சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தீபாவளிக்கு அடுத்த நாள் வேலை நாளாக இருப்பதால், தீபாவளி அன்றிரவே வசிக்கும் ஊர்களுக்கு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு..!! வலுக்கும் கோரிக்கை

எனவே, சொந்த ஊருக்குச் சென்ற மக்கள் மனத்திருப்தியுடன் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுரிகளுக்கு வரும் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்தாண்டு, வியாழக்கிழமை (04.11.2022) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. சொந்த ஊருக்குச் செல்லும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில், வெள்ளிக்கிழமையை விடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறையாக இருந்தது.

தமிழகத்தில் தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு..!! வலுக்கும் கோரிக்கை

எனவே, இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் விடுமுறை அறிவிக்கலாம் என்றும், அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வேறொரு வார விடுமுறையை பணி நாளாக அறிவிக்கலாம் என்றும் பெற்றோர்கள் கருதுகின்றனர்.

Chella

Next Post

தீப்பிடித்து எரிந்த ஹெலிகாப்டர்..!! தமிழகத்தை சேர்ந்த மூவர் உள்பட 7 பேர் பலி..!! திடுக்கிடும் தகவல்..!!

Tue Oct 18 , 2022
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே இன்று ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், ருத்ரபிரயாக்கில் உள்ள கருட் சட்டி அருகே உள்ள கேதார்நாத் கோவிலில் இருந்து காலை 11.40 மணியளவில் புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளாகி உள்ளது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர், விபத்து நடந்த இடத்திலிருந்து இதுவரை 6 யாத்ரீகர்கள் […]
தீப்பிடித்து எரிந்த ஹெலிகாப்டர்..!! தமிழகத்தை சேர்ந்த மூவர் உள்பட 7 பேர் பலி..!! திடுக்கிடும் தகவல்..!!

You May Like