சென்னை , செங்கல்பட்டு உள்பட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வட தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, மயிலாடுதுறை , தஞ்சாவூர் , திருவாரூர் , நாகை , புதுக்கோட்டை , சிவகங்கை , திருவள்ளூர் , சென்னை , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , விழுப்புரம், கடலூர் , கிருஷ்ணகிரி , கன்னியாகுமரி , மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.