fbpx

சென்னையில் அதிரடியாக களமிறங்கிய வருமான வரித்துறை..!! 20-க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனை..!!

சென்னையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்பு தொடர்பாக அவ்வப்போது வருமான வரித்துறை அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் Kawarlal pharmaceutical நிறுவனம் தொடர்பான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரிச் சோதனை நடைபெற்று வருகிறது.

வெளிநாட்டிற்கு மருந்து பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் இந்த நிறுவனத்தில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது. மேலும், சென்னை ராயபுரத்தில் Manish parasmal Jain என்ற மருந்து நிறுவனத்திலும் சோதனை நடைபெறுகிறது. வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் சென்னை ஆயிரம் விளக்கு, எழும்பூர், வில்லிவாக்கம், மாதவரம், மண்ணடி, தாம்பரம், குன்றத்தூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையும், விசாரணையும் முழுமையாக முடிவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான முழு விவரங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Chella

Next Post

சப்பாத்திக்கு இப்படி ஒரு பிரச்சனையா..? கொந்தளித்த பூர்ணிமா..!! கூல் பண்ணும் மாயா..!!

Wed Oct 18 , 2023
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக 3-வது வாரத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இந்நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து சண்டைக்கு பஞ்சம் இல்லாமலே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கப் போகிறது என்பதனை பார்க்கலாம். பிக்பாஸ் வீட்டில் கூல் சுரேஷ் செய்வதை நாங்களும் செய்வோம் என மணியும், ரவீனாவும் கிரிஞ்சுக்கு கிரிஞ் பண்ணீட்டு இருக்காங்க, அடுத்தபக்கம் நான் தான் 3 சப்பாத்தி விஷ்ணுவுக்கு வைச்சன், சாப்பிட்டு […]

You May Like