fbpx

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு..!! திணறும் நோயாளிகள்..?அதிகபட்சம் 322..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பால் சென்னையில் 3-வது நாளாக காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. காற்றின் தரம் குறைந்ததன் காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றின் தரக்குறியீடு 200 முதல் 300 வரை பதிவாகியுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக மணலியில் 322 என்ற தரக் குறியீட்டை தாண்டி மிக மோசமான அளவில் காற்று மாசு உள்ளதாகவும், வேளச்சேரியில் 308, அரும்பாக்கத்தில் 256, ஆலந்தூர் 256, ராயபுரம் 232, கொடுங்கையூரில் 126 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகி உள்ளது. அதேபோல் கும்மிடிப்பூண்டி 241, வேலூரில் 230, கடலூரில் 213 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது.

காற்று மாசு காரணமாக சுவாச பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 101-200 என்ற மிதமான காற்று மாசுவினால் ஆஸ்துமா போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தலாம் என்றும் 201-300 அளவிலான மோசமான காற்று மாசுவினால் நீண்டநேரம் வெளியில் உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல், இதய நோய் உள்ளவர்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Chella

Next Post

’லிவிங் டு கெதர்’ வாழ்க்கை முறைக்கு சிக்கல்..!! அமலாகிறது பொது சிவில் சட்டம்..!!

Mon Nov 13 , 2023
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அங்கு ஆட்சியை தக்க வைத்ததைத் தொடர்ந்து, பொது சிவில் சட்டம் குறித்து ஆராய உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சன் தேசாய் தலைமையில் குழு ஒன்றை முதல்வர் புஷ்கர் சிங் தாமி அமைத்தார். இந்த குழு பொது சிவில் சட்டம் குறித்த வரைவு அறிக்கையை பல்வேறு […]

You May Like