நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதார அமைச்சர்கள் மற்றும் முதன்மை தலைமைச் செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் அனைத்து மாநிலங்களிலும் சுகாதார வசதிகள் உள்கட்டமைப்புகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஏப்ரல் 8, 9 ஆம் தேதிகளில் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் சுகாதாரத் தயார்நிலையை மதிப்பாய்வு செய்யவும், ஏப்ரல் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் அனைத்து மருத்துவமனை உள்கட்டமைப்புகளின் போலி பயிற்சிகளை நடத்தவும் மாநில சுகாதார அமைச்சர்களை அவர் வலியுறுத்தினார். அதுமட்டுமின்றி, பொதுமக்களிடையே தேவையில்லாத அச்சத்தை பரப்பாமல், எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும்’ எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.