மகளிர் ஆசிய கோப்பைக்கான டி.20 போட்டியில் மலேசிய அணியுடன் மோதி இந்திய அணி வெற்றி பெற்றது.
மகளிர் ஆசியக்கோப்பைக்கான டி.20 போட்டிகள் நடைபெற்றுவருகின்றது. முதல் போட்டியில் இந்திய அணி இலங்கையுடன் மோதி வெற்றி பெற்ற நிலையில் இன்று மலேசிய அணியுடன் மோதியது. முதல்போட்டியில் மந்தனா , பூஜா, ஸ்னேக் ராணா , ரேணுகா சிங் ஆகிய நான்கு வீராங்கனைகள் விளையாடவில்லை. பதிலாக மேகனா , கிரண் , மேக்னா , ராஜேஸ்வரி விளையாடினர்.
20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேகனா 69 லன்கள், ஜெபாலி வர்மா 46 ரன்களும் எடுத்திருந்தனர். பின்னர் மலேசியா அணி விளையாட தொடங்கியது. 62 விக்கெட் இழப்பில் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் -வது ஓவரில் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் டிஎல்எஸ் முறையில் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.