fbpx

ரெஸ்ட் இல்லாமல் அடுத்தடுத்த டி20, டெஸ்ட், ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி!… 2024 பிஸியான போட்டி அட்டவணை!

வரும் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை நடக்க உள்ள நிலையில், டீம் இந்தியா அதற்காக அடுத்தடுத்த டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

உலகக் கோப்பை 2023 தொடருக்கான அட்டவணை அண்மையில் அறிவிக்கப்பட்டது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடர் முடிந்த உடன் இந்தியா தனது முழு கவனத்தையும் டி20 உலகக் கோப்பை மீது செலுத்துகிறது. டிசம்பர் மாதம் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது.

டி20 உலகக் கோப்பைக்கான மிஷன் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் வரும் ஜனவரி – மார்ச் மாதங்களில் நடக்கிறது. ஜூலை மாதம் இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதே போன்று செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. கடைசியாக அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

ஒருநாள் உலகக் கோப்பை முடிந்த பிறகு, இந்திய கிரிக்கெட் அணி தங்கள் கவனத்தை டி20 போட்டிகளில் மட்டுமே செலுத்துகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, அமெரிக்காவிலிருந்து டிராபியை வீட்டிற்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து டி20 உலகக் கோப்பையை நடத்துகின்றன.

தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆனால், தற்போது இந்திய அணியின் முழு கவனம் முழுவதும் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மீது செலுத்தியுள்ளது. இந்த தொடருக்கு பிறகு இந்திய அணி ஓய்வில்லாமல் அடுத்தடுத்த டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

அதிரடி...! பணியில் இருக்கும் காவலர்கள் செல்போன் பயன்படுத்தக் தடை...! காவல் ஆணையர் உத்தரவு...!

Tue Jul 4 , 2023
பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பாதுகாப்புப் பணி மற்றும் சாலைகளில் போக்குவரத்துப் பணியிலிருக்கும் காவலர்கள் பணி நேரத்தில் செல்போனைப் பயன்படுத்துவதால், அவர்களால் பணியை சரியாக செய்யமுடியாதபடி கவனச் சிதறல் ஏற்படுகிறது. இந்த கவனச் சிதறலால் பல முக்கியப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. குறிப்பாக, சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்புப் பணி, முக்கியப் பிரமுகர்கள் பாதுகாப்புப் […]

You May Like