இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு ஒன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.
72 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பெர்ஹாம்பூர் வங்கி தொடர்பான வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு தற்போதைய தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பிறப்பதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்பே தாக்கல் செய்யப்பட்டது என்பது முக்கியமான விஷயம். இதற்கிடையே, பெர்ஹாம்பூர் வங்கியின் கலைப்பு செயல்முறை தொடர்பான வழக்கு இறுதியாக முடிவுக்கு வந்ததுள்ளது. இந்த வழக்குகளைக் கையாண்ட பிறகு, இப்போது நிலுவையில் உள்ள பழமையான 5 வழக்குகளில் 3 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும், அவற்றில் 2 சிவில் வழக்குகள் எனவும் கூறப்படுகிறது. இந்த 2 சிவில் வழக்குகளும் வங்காளத்தில் உள்ள மால்டா நியூஸில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், இன்னொன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிகிறது.

வழக்கு விவரம்…
பெர்ஹாம்பூர் வழக்கு இந்திய நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் மிகப் பழமையான வழக்கு ஆகும். 1948- ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி அன்று, கொல்கத்தா உயர்நீதிமன்றம் அப்போது திவாலாக இருந்த பெர்ஹாம்பூர் வங்கியை மூட உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் கலைப்பு நடவடிக்கைகளை எதிர்த்து ஜனவரி 1, 1951 அன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அதே நாளில் நீதிமன்ற நடவடிக்கைகள் வழக்கு எண் 71/1951 ஆக பதிவு செய்யப்பட்டது.
இதுவரை இந்த வழக்கில் என்ன நடந்தது?
பெர்ஹாம்பூர் வங்கி மீது கடன் வாங்கியவர்களிடமிருந்து பணத்தை திரும்பப் பெறுவதற்கு பல வழக்குகள் உள்ளன. இந்தக் கடன் வாங்கியவர்களில் பலர் வங்கியின் கோரிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியிருந்தனர். கடந்தாண்டு செப்டம்பரில் வங்கியை கலைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனு உயர்நீதிமன்றத்தில் 2 முறை விசாரணைக்கு வந்தது. ஆனால் அந்த மனுக்கள் எதுவும் விசாரிக்கப்படவில்லை. இந்நிலையில், நீதிபதி கபூர் நீதிமன்றத்தின் கலைப்பாளரிடம் அறிக்கை கேட்டிருந்தார். 2022 செப்டம்பர் 19 அன்று, இந்த வழக்கு ஆகஸ்ட் 2006 இல் தீர்க்கப்பட்டதாக அசிஸ்டண்ட் லிக்விடேட்டர் பெஞ்சில் கூறினார். பதிவேட்டில் இடம் பெறாததால், வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நீதிபதி கபூர் கடைசியாக இரண்டாவது பழமையான வழக்கை 23 ஆகஸ்ட் 2022 அன்று விசாரித்தார். அப்போது , அனைத்து தரப்பினரையும் சந்தித்து நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பதற்கான வழிவகைகளை பரிந்துரைக்குமாறு வழக்கறிஞர் மற்றும் சிறப்பு அதிகாரிக்கு அறிவுறுத்தினார். இதற்கிடையே, வழக்கை தொடர்ந்த வங்கி நிர்வாகிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் வழக்கு நிலுவையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.