fbpx

காயமடைந்த சிறுவன்!… தையல் போடுவதற்கு பதில் பெவிக்விக் ஒட்டிய மருத்துவர்கள்!… பெற்றோர்கள் அதிர்ச்சி!

தெலுங்கானாவில் சிறுவனுக்கு கண் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போடுவதற்கு பதில் பெவிக்விக் என்னும் பசையை மருத்துவர்கள் ஒட்டி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் ஆயிஜாவில் வம்சிகிருஷ்ணா – சுனிதா தம்பதியினரின் மகன் பிரவீன் எனும் சிறுவனுக்கு இடது கண்ணின் மேல் பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரது பெற்றோர்கள் அழைத்து சென்றனர். அப்போது அங்கிருந்த மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார்.
அதாவது, நெற்றியில் தையல் போட வேண்டிய நிலைமை இருந்துள்ளது. ஆனால் தனியார் மருத்துவமனை மருத்துவர் அந்த இடத்தில் தையல் போடாமல் பெவிக் விக் எனப்படும் பசையை கொண்டு ஒட்டியுள்ளார். இந்த சம்பவத்தை கண்டு பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தெலுங்கானாவில் இந்த சம்பவம் பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Kokila

Next Post

வாடிக்கையாளர்களின் ஆதார் எண் விவரங்களை சரிபார்க்க!... 22 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி!

Sun May 7 , 2023
ஆதார் எண் விவரங்கள் சர்பார்ப்பு பணிகளை கையாளுவதற்காக 22 நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடிக்கையாளர்களின் ஆதார் எண் விவரங்களளை தனியார் நிறுவனங்கள், அரசின் குறிப்பிட்ட சலுகைகளுக்கு சரிபார்க்கும்படியான வாய்ப்பை கையாள மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையிலும் அரசு நடவடிக்கை தொடர்ந்தது. தற்போது முதற்கட்டமாக, 22 நிறுவனங்களுக்கு அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி, 22 நிதி […]

You May Like