fbpx

INSTAGRAM | நட்பால் நடந்த கொடூரம்.. 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த நண்பன்.!

கேரளாவில் 15 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம்(INSTAGRAM) மூலம் நட்பை ஏற்படுத்திய நபர், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து அந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். குற்ற செயலில் ஈடுபட்ட திருச்சூரைச் சேர்ந்த அந்த மூவரின் மீதும், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி மாயமானார். அவரது பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் சிறுமியை காவல்துறையினர் மும்முரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி, அந்த சிறுமி அதிகாலை 4 மணி அளவில் திருவல்லா காவல் நிலையத்தை வந்தடைந்தார்.

அவரிடம் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டபோது பல அதிர்ச்சி தரும் தகவல்களை தெரிவித்தார். திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த அதுல்(21) என்ற இளைஞர் அந்த சிறுமியுடன் இன்ஸ்டாகிராம்( INSTAGRAM) மூலம் நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அந்த சிறுமியை அதுல் மற்றும் அவரது நண்பர் அஜில்(21) இருவரும் திருவல்லாவுக்கு பேருந்தின் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் திருச்சூரில் உள்ள அவர்களது இன்னொரு நண்பனான ஜெயராஜின் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த மூவரும் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். அந்த சிறுமி கடத்தப்பட்ட செய்தி வைரலானதால், பயந்த அந்த மூவரும், அந்த சிறுமியை திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். சிறுமி திருவல்லா காவல் நிலையத்தை அடைந்ததும், திருச்சூர் திரும்பிக் கொண்டிருந்த அதுலைக் கண்டுபிடித்து, கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தில் வைத்து, காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்கள் மூவரின் மீதும் இந்திய தண்டனைச் சட்டங்களான போக்சோ சட்டம், கற்பழிப்பு மற்றும் கடத்தல் பிரிவுகள் மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

English summary: Minor girl was abducted and raped by Instagram friends 3 men in Kerala.

Read more:

செய்திகள்

Village | ஒரு கிராமத்தையே பணக்காரர்களாக மாற்றிய விவசாயம்..!! அப்படி என்னதான் செய்றாங்க இங்க..?

Next Post

BREAKING | சாந்தனின் உடல்நிலையில் பின்னடைவு..!! மருத்துவர்கள் தொடர் சிகிச்சை..!!

Mon Feb 26 , 2024
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சாந்தனின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது கோமாநிலைக்குச் சென்ற அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்தும் […]

You May Like